Wednesday, September 14, 2011

திஹாரில் கனிமொழி! திண்டாடும் திமுக! கொண்டாடும் முப்பெரும் விழா!

னிமொழியின் காத்திருப்பு!அசையாச் சொத்திற்காய்
அப்பாவின் சொற் கேட்டு
ஆசை கொண்டேன் - அன்று
அப்போது ஒரு நிமிடம்
உட்கார்ந்து யோசித்தால்
பாசை மறந்த ஊரில்
பரிதவித்திருப்பேனா?
நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினர் பதிவு thamilnattu.com


திஹாரில் தனியறை,
நான் தின்னும் உணவிலோ
கசக்கின்ற உப்புச் சுவை
மண்ணாளும் வயதில்
மென்மையான தமிழ்(க்) கவி வடித்து
பொன்னாடை போர்த்தி
பெருமிதம் கொள்ள வேண்டிய நானோ
திண்டாடி இருக்கின்றேன்!
என்ன தான் நடக்கும் நாளைய;
ஏகாந்தப் பொழுதில் என
என் முன்னே உள்ள
கம்பியை எண்ணி காத்திருக்கின்றேன்!
நிரூபனின் நாற்று வலையிலிருந்து காப்பி செய்யப்படுகின்றது.
மானாட மயிலாட பார்த்து
எமக்கெல்லாம் மகத்தான
அரசியல் சாணக்கியம் கற்பித்த
தந்தையின் மொழியை அன்றோ
உதறித் தள்ளி நான்
விட்டிருந்தால்
இன்று கோபாலபுரத்தின்
தலைவியாய் ஆயிருப்பேன்!
என் கோலங்கள் சிதைந்தல்லவா
இன்று கொடுந்துயரில் மூழ்குகின்றேன்!
நான்கு சுவர் நடுவே
நாவறண்டு வாழ்கின்றேன்,
நாளை(15.09.2011) என்ன நடக்கும்
என நெஞ்சு பட படக்க
ஏங்குகின்றேன்!


திண்டாடும் திமுக! கொண்டாடும் முப் பெரும் விழா! 

"மந்திரியும் சிறை சென்றார்,(ராசா)
மலை போல் நீண்ட
சங்கிலித் தொடராக
என் மகளும் பின் சென்றார்
என்றாலும் எம் தமிழ் உணர்வில்
ஏது குறை காண்பீரோ?
கொண்டாடி மகிழ்வோம்
முப்பெரும் விழாவை
கோலுவேற்றிப் பாடுவோம்
திமுக புகழை நாளை(15.09.2011)


மன்றாடிக் கனி மொழி
வழக்காடு மன்றத்தில் இரைஞ்சினாலும்
"சிபிஐ தான் மோந்து பார்த்துப் பிடித்திடுமா
நாம் பதுக்கியுள்ள பணத்தை?"
என்றோதும் கலைஞரின்
குரல் கேட்ட பின்னுமா
கனி மொழியே
உன் தந்தையினை
நம்பி(க்) காத்திருக்கின்றாய்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...