Wednesday, September 14, 2011

தி.மு.க.வின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

பெரியாருக்கும்,அண்ணாவுக்கும் இடையில் தோன்றிய முரண்பாடுகளால் தி.மு.க தோன்றியது!  சென்னை ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்டபோது அண்ணாவுடன்  கருணாநிதி இருக்கவில்லை. பிறகு வந்து சேர்ந்து கொண்டார். தனது பேச்சு,எழுத்து செயல்,ஆளுமை அனைத்தையும் பயன்படுத்தி அண்ணாவுக்குப்பின் தன்னை தலைவராக நிலைநிறுத்திக் கொண்ட கருணாநிதியை பற்றி கூறும்போது,தி.மு.க.வின் வரலாற்றை முதல் பாதியை நான  எழுதுகிறேன் , பிற்பாதி வரலாற்றை எனது தம்பி கருணாநிதி எழுதுவார, என்றார்.  அத்தனை, நம்பிக்கையும்,ஆற்றலும் படைத்தது இருந்த கருணாநிதிக்கு பிறகு தி.மு.க.வின் தற்போதைய நிலை என்ன என்பதை இன்று நாம் கண்முன்னே காணுகிறோம்!


                                                 கடந்த 10 -வருடங்களுக்கு முன்பு இருந்த தி.மு.க விற்கும்,இப்போது உள்ள தி.மு..கவிற்கும் மலைஅளவு வித்தியாசம் இருப்பதை அறிவோம்!   ஆரம்பிக்கப்பட்டபோது,தி.மு.கவிற்கு தமிழர் நலம்,திராவிட இனஉணர்வு, மொழயுணர்வு,சுயமரியாதை,சமத்துவம், தீண்டாமை எதிர்ப்பு,போன்ற கொள்ள்கைகளும்,இலட்சியங்களும் இருந்தது,பேசப்பட்டது!   மாற்றத்தை விரும்பிய இளைஞர்களும் சமூக ஆர்வலர்களும் தி.மு.கவை ஆதரித்தனர். தி,மு.க. வேகமாக வளர்ச்சி அடைந்தது,வெற்றி பெற்று ஆட்சியைபிடித்தது.  தேசிய கட்சிகள் மாநிலங்களில் செல்வாக்கு இழந்தனன.                                                                                                                இன்று.........,எந்த பொது நோக்கத்துக்காக,தி.மு.க  தோன்றியதோ, அத்தனை நோக்கங்களும் மாறி விட்டது, தேசிய கட்சிகளின் வழியில், ஊழலிலும்,ஒழுங்கீனம அற்ற செயல்களிலும் ஈடுபட்டு  வெகுஜன மக்களின் வெறுப்புக்கு ஆளாகி உள்ளது!  நீ யோக்கியமா? நீ ஊழல் செய்யவில்லையா?  என்பது தான் அரசியல்  எனும் நிலைக்கு, வந்து விட்டது!       ஜனநாயக வழியில், ஆட்சியை பிடித்து, மன்னர்கள் போல நடந்து கொண்டதால், மக்களின் சேவகர்கள் என்ற நிலையை மறந்து, எஜமானர்  போல நடந்து வந்ததால் தி.மு.கவின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிஉள்ளது!     
                      

வெற்றிகரமாக அண்ணா ஆரம்பித்த, தி.மு.க. இப்போது,தோல்வியை நோக்கி... அதாவது, முடிவை நோக்கி போவது போல தோன்றுகிறது.  ஸ்டாலின்,அழகிரி  பதவிப் போட்டிகளும் , கனிமொழி , தயாநிதி சந்தித்து வரும் பிரச்சனைகளும்,  தி.மு.கவின்  தளபதிகளான,மாவட்ட செயலாளர்கள்,மாஜி மந்திரிகள் கைது செயப்பபட்டு வருவதற்கான காரணங்களும் பெரியாருக்கு பிறகு தி.கவின்  நிலையை  தி.மு.க. அடையுமோ?     என எண்ணவைத்துள்ளது!
 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...