Wednesday, September 21, 2011

2ஜி விவகாரம்: மூத்த அமைச்சர்களிடையே மோதல்

 2ஜி விவகாரம் தொடர்பாக மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி மற்றும் சிதம்பரம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 2ஜி விவாகரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு குறிப்பு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், 2ஜி ஏலத்தின் போது, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சக அதிகரிகளின் எச்சரிக்கையையும் மீறி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் அனுமதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி மற்றும் சிதம்பரம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சிதம்பரம் பதவி விலக பா.ஜ., மற்றும் கம்யூ., கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...