Tuesday, September 6, 2011

சோனியா அரசு..... ” விக்கிலீக்ஸ் பகீர் ”.......தலை சுற்றுதே....

விக்கிலீக்ஸ் மத்திய காங்கிரஸ் மந்திரிகளை தோலுரித்துக் காட்டியிருக்கிறது..
அப்படியானால் அவர்களெல்லாம் “ ரொம்ப யோக்கியமானவர்கள் “--என்று இன்னாள் வரை நாம் நினைத்திருந்தோமா?---அந்த நினைப்பில் “ ஜூலியன் அசாஞ் “ மண்ணைவாரி போட்டுவிட்டாரா?---

அதெல்லாம் ஒன்றுமில்லை....விக்கிலீக்ஸ்.. "disclosures " ஒன்றும் ஆச்சரியமில்லை...புதுமையில்லை..ஆனால் இதையெல்லாம் விக்கிலீக்ஸ் சொன்னால்தானே நம்மாளு நம்புகிறான்..ஒரு மகாபாரதத்தையும்..ஒரு ராமாயணத்தையும்..ஒரு மேற்கத்திய வெள்ளைத்தோல்காரன் “ மாக்ஸ்முல்லர் ‘சொன்னால்தானே நம்மாளுக்கு அதன் பெருமை புரிகிறது..

இதில் என்ன கேவலம் என்றால் “ இந்த கேவலமானவர்கள் “ நேற்றுவரை நமக்குத்தான் கேவலமானவர்கள் என்று தெரியும்..இன்று உலகம் முழுவதும் தெரிந்து..நாட்டையே தலைகுனிவுக்கு ஆளாக்கிவிட்டார்களே..என்கிற வருத்தம்தான் நமக்கு..

பொட்டிப்பாம்பாய்...எழுதிக் கொடுத்ததை மட்டும் படிக்கும்---வெளியுறவு மந்திரி..கிருஷ்ணா..
அடுத்த பிரதமராக துடிக்கும் பிரணாப் முகர்ஜி..
கன்னம் வைத்து திருடும் களவாணிகளுக்கு காவல் புரியும் மன்மோகன் சிங்..
அமெரிக்க ஜால்ரா..அடிவருடி..சசிதரூர்..
அமெரிக்காவே இவர் என்ன பேசுகிறார் என தெரியாமல் தவிக்கவைக்கும்..ராகுல் காந்தி..
ரஷ்யாவுக்கு சாமரம் வீசும் அந்தோணி..
சர்வதேச பயங்கரவாதி  “டேவிட்.ஹெட்லி ‘யை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டாம்--என அமெரிக்கா கால்களில் விழுந்த எம்.கே.நாராயணன்..
அவருக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் ப.சிதம்பரம்..
அமெரிக்காவுக்கு  “ சலாம் போடுவதே கொள்கை “.எனக் கொண்ட சோனியா..

இதற்குமேல் தரிகெட்டு செயல் படும் ( செயல்படா )..அரசாங்கம் உலகில் வேறெங்காவது காணமுடியுமா?--அப்பப்பா...தலை சுற்றுகிறதே...உங்களுக்கு..?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...