Wednesday, September 28, 2011

கனிமொழிக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று செய்தி போடாதவரை மகிழ்ச்சி - கருணாநிதி!

கனிமொழிக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் என்று செய்தி வெளியிடாதவரை மகிழ்ச்சியே என்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கனிமொழி மீது தற்போது சி.பி.ஐ. சாற்றியிருக்கின்ற குற்றச்சாட்டு, பத்தாண்டுகள் தண்டனைக்குரியது என்று இன்று மாலைப் பத்திரிகைகளில் பெரிதாக வெளியிட்டிருக்கிறார்களே? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு

''மாலை மலர், மாலை முரசு போன்ற நாடார் பத்திரிகைகள், கனிமொழி நாடார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்த அளவிற்கு சாதிப் பற்றோடு அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றெல்லாம் செய்தி வெளியிட்டிருக் கிறார்கள். அவர்கள் தூக்குத்தண்டனை கிடைக்கும் என்றுபோடவில்லை. அதுவரை மகிழ்ச்சி.'' என்று பதில் அளித்தார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகளுக்குப் பதிலாக பத்திரிக்கையாளர்களே நீதிபதிகளாக மாறி தீர்ப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று கருணாநிதி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...