Wednesday, September 21, 2011

சிக்கினார் ப.சிதம்பரம் !- டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் துருப்புச் சீட்டு !! எடுத்துக் கொடுத்தவர் பிரனாப் முகர்ஜி !!!

சிக்கினார்  ப.சிதம்பரம் !- டாக்டர்
சுப்ரமணியன் சுவாமியின் துருப்புச் சீட்டு !!
எடுத்துக் கொடுத்தவர் பிரனாப் முகர்ஜி !!!


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய
நிதியமைச்சர் (இப்போதைய உள்துறை அமைச்சர்)
ப.சிதம்பரம் அவர்களையும் சேர்க்க வேண்டும்
என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
செய்திருந்தார் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி.

சிபிஐ வழக்கறிஞரும், உள்துறையும் இதை
எதிர்த்து வழக்காடின. விசாரணை கிட்டத்தட்ட
முடிவடைந்து குற்றப்பத்திரிகையும் தாக்கல்
செய்து விட்ட இந்த நிலையில் இதை அனுமதிக்க
கூடாது என்று அவர்கள் வாதித்தனர்.

மேலும், இதை தீர்மானம் செய்ய வேண்டிய
இடம் சுப்ரீம் கோர்ட் அல்ல என்றும், சுவாமி
சொல்ல வேண்டியதை சிபிஐ கோர்ட்டில் தான்
சொல்ல வேண்டும் என்றும் வாதித்தனர்.

ஒரு புதிய  திருப்புமுனையாக,
யாரும் எதிர்பாரா வண்ணம்,
இன்றைய தினம் (21/09/2011) தனது
வாதத்திற்கு துணையாக,  அசைக்க முடியாத
புதிய ஆவணம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில்
சமர்ப்பித்திருக்கிறார் டாக்டர் சுவாமி.

மார்ச் 2011ல் நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜியின்
தரப்பில் இருந்து, பிரதமருக்கு ஒரு கடிதம்
போயிருக்கிறது.  அதில் -

ராஜாவின் 2g ஸ்பெக்ட்ரம் ஊழல் நடக்க
ப.சிதம்பரம் அவர்கள் ஒத்துழைத்ததே காரணம்
என்கிற வகையில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு
இருக்கின்றன.

ப.சிதம்பரத்திற்கும், பிரனாப் முகர்ஜிக்கும்
இடையே பிரச்சினை என்று சில மாதங்கள்
முன்னரே செய்திகள் வெளியாயின. பின்னர்
பிரனாப் முகர்ஜியின் அலுவலகத்தில் உளவு வேலை
நடப்பதாக முகர்ஜி பிரதமருக்கு புகார் கொடுத்தார்.
ரகசிய விசாரணைகள் நடந்ததாகவும் தகவல்கள்
கசிந்தன.

இப்போது வெளிவந்து விட்டது விவகாரம்.
இருவருக்குள் மோதல் இருந்திருப்பது இப்போது
வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்த கடிதத்தின் நகலை டாக்டர் சுப்ரமணியன்
சுவாமி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்
பெற பிரனாப் முகர்ஜியின் துறையே உதவி
இருப்பதும் தெரிகிறது.

நாளை சுப்ரீம் கோர்ட்டில் வாதம் தொடர்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...