திரையில் தாம் தோன்றும் காட்சியில் அவரை யாரும் கவனிக்கத் தவற இயலாதபடிக்கான உயரம், உடல் மொழி, வித்தியாசமான குரல், அசத்தலான முக பாவம், காத்திரமான நடிப்பு, நேர்த்தியாகப் பார்வையாளரது கவனத்தைத் தன்னை நோக்கிக் குவிய வைத்துவிடும்படியான இருப்பு, இத்தனையும் துருத்திக்கொண்டிராத தன்னியல்பான பங்களிப்பு... அதுதான் ரங்கா ராவ்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, November 15, 2022
திரு. S.V.ரெங்காராவ் அவர்கள்.
திரையுலகின் கடோத்கஜனுக்கு அந்த வேடமே கிடைத்துவிட்டபின், வேறென்ன சொல்ல? ‘மாயா பஜார்’ படமே அவரது அராஜக அட்டகாசங்களால் சிறப்பாக இருக்கும். 'கல்யாண சமையல் சாதம்' என்று திருச்சி லோகநாதன் எடுத்துக் கலக்கும் அற்புத பாடலுக்கு அவரைக் காட்டிலும் வேறு யார் கடோத்கஜன் என்று நாம் கண்டிராத கதாபாத்திரம் ஒன்றை நடிப்பின் மூலம் நம்ப வைத்திருக்கமுடியும்! புராணக் கதாபாத்திரங்களுக்கு, தந்தை முத்திரை நடிப்புக்கு அவரே இணை!!!
நகைச்சுவை, பாசம், ஆத்திரம், முரட்டுக் கோபம், ஆதங்கப் பெருமூச்சு, பேரமைதி என எத்தனையோ உணர்ச்சிகளை வண்ணங்களாகக் குழைத்து அவர் திரையில் தீட்டிய சித்திரங்கள் வரும் தலைமுறைக்கு நடிப்புக்கலையின் பாடம். தாமே சிறந்த கதாசிரியராக, கவிஞராக, பன்முக ஆற்றல் நிரம்பியவராக, ஆனால் எளிய ஆளுமையாக வாழ்ந்த மாபெரும் கலைஞன்.

Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment