Thursday, October 19, 2017

தமிழ் சினிமாவில் புதுமைகளைப் புகுத்தி திருப்புமுனை ஏற்படுத்தியவர், ஸ்ரீதர்.

விரல் விட்டு எண்ணத்தக்க மிகச்சிறந்த சாதனையாளர்கள் பட்டியலில், ஸ்ரீதர் பெயரும் இடம்பெறும்.
மதுராந்தகத்துக்கு அருகில் உள்ள சித்தாமூர் என்ற கிராமம் தான் ஸ்ரீதரின் சொந்த ஊர். 1933–ம் ஆண்டில் ஜூலை மாதம் 22–ம் நாள் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே, கதைகள் எழுதுவார். பள்ளி நாடகங்களில் நடிப்பார்.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் எப்படியும் சினிமாவில் நுழைந்து விட வேண்டும் என்று முயற்சி செய்தார். வெற்றி கிடைக்கவில்லை.
டி.கே.சண்முகம்
நாடக உலகில் முடிசூடா மன்னரான டி.கே.சண்முகத்தை ஸ்ரீதர் சந்தித்தார். தான் கொண்டுபோயிருந்த கதைச் சுருக்கத்தை கொடுத்தார்.
கதையை இப்படித் தொடங்கினார் ஸ்ரீதர்:
‘‘ஒரு மனிதன் பிறக்கும் போதே அயோக்கியனாக பிறப்பதில்லை. அவன் வளரும் சூழ்நிலை, பழகும் நண்பர்கள், அவனுடைய வாழ்க்கை முறை இவற்றால்தான் அயோக்கியனாக மாறுகிறான்’’.
இந்த வரிகள், டி.கே.சண்முகத்தைக் கவர்ந்தன. முழுக்கதையையும் கொண்டு வரச்சொன்னார். ஸ்ரீதர், மதுராந்தகத்துக்கு போய் முழுக்கதையையும் கொண்டு வந்தார். அதைப் பார்த்த சண்முகத்துக்கு வியப்பு ஏற்பட்டது.
‘‘கதையை எழுதியது இந்த பையனா? அல்லது வேறு யாராவது எழுதிக் கொடுத்திருக்கிறார்களா?’’ என்று சந்தேகப்பட்டார்.
கதையில் உணர்ச்சிமயமான இரண்டு கட்டங்களை தேர்வு செய்து, அதற்கு அங்கேயே உட்கார்ந்து வசனம் எழுதும்படி சொன்னார். ஸ்ரீதரும் கிடுகிடுவென சிறப்பாக வசனம் எழுதிக்காட்டினார்.
ரத்தபாசம்
மகிழ்ச்சி அடைந்த டி.கே.சண்முகம், ஸ்ரீதரின் கதையை நாடகமாக்க முடிவு செய்தார்.
ஸ்ரீதர் தன் கதைக்கு ‘‘லட்சியவாதி’’ என்று பெயர் சூட்டி இருந்தார். அதை டி.கே.சண்முகம் ‘‘ரத்தபாசம்’’ என்று மாற்றி, 1951–ம் ஆண்டு நவம்பர் 11–ம் நாள் சென்னை ரசிகரஞ்சனி சபாவில் நாடகமாக அரங்கேற்றினார். நாடகம் பெரும் வரவேற்பு பெற்றது.
Image may contain: 1 person, closeup
அதை சினிமாவாக தயாரிக்க ஜூபிடர் பிக்சர்ஸ் அதிபர் சோமு விரும்பினார். இதுபற்றி நடந்த பேச்சுவார்த்தையில், டி.கே.சண்முகமும், ஜூபிடர் சோமுவும் கூட்டாக (அவ்வை – ஜூபிடர் புரெடக்ஷன்ஸ் என்ற பேனரில்) ரத்தபாசம் படத்தை தயாரிப்பது என்று முடிவானது.
ஸ்ரீதர் சிறுபையனாக இருந்ததால், பிரபலமான வசனகர்த்தா யாரையாவது வைத்து வசனம் எழுதலாம் என்று ஜூபிடர் சோமு சொன்னார். அதை முற்றிலுமாக நிராகரித்த சண்முகம், ‘‘ஸ்ரீதர் வயதில் குறைந்தவராக இருந்தாலும், வசனம் எழுதுவதில் மிகத்திறமைசாலி. அவர்தான் படத்துக்கு வசனம் எழுதவேண்டும். இல்லாவிட்டால் படத்தயாரிப்புக்கே நாங்கள் வரவில்லை’’ என்று கூறிவிட்டார். இதனால் ரத்தபாசம் படத்திற்கு ஸ்ரீதரே வசனம் எழுதினார். படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.மணி.
‘ரத்த பாசம்’ படத்தில் டி.கே.சண்முகம், டி.கே.பகவதி ஆகியோருடன் கதாநாயகியாக அஞ்சலி தேவி நடித்தார். படம் 1954–ம் ஆண்டு வெளியாகி, சக்கைபோடு போட்டது. ‘ரத்த பாசம்’ கதை–வசனத்துக்காக, ஸ்ரீதருக்கு 500 ரூபாய் கொடுத்தார், சண்முகம். அக்காலத்தில் அது பெரிய தொகை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...