Tuesday, October 17, 2017

“அப்படி என்ன கட்டாயம்.?”



குடி போதையில் சாலையோரத்தில் விழுந்து கிடந்த வனை லத்தியால் தட்டி எழுப்பிய அந்தக் கான்ஸ்டபிள் கோபத்துடன் கேட்டார்.
"ஏய்! தலைகால் புரியாம விழுந்து கெடக்கிறியே, எவ்வளவு குடிச்சே?"
"சார்! ஒரு ஃபுல் பாட்டிலயும் குடிச்சிட்டேன்."
“ஏன்யா... இப்படி நிதானம் தவறும் அளவுக்கா குடிப்பது? ஒரு லிமிட் வேணாம்?”
கேட்ட அந்த கான்ஸ்டபிளைப் பார்த்து வருத்தத்துடன் சொன்னார்.
“நெலம அப்படி சார். குடிக்க வேண்டிய கட்டாயம் ஆகிப் போச்சு.!”
சொன்னவன் முகத்தில் தெரிந்த வருத்தத்தைப் பார்த்த கான்ஸ்டபிள் சற்றே தனிந்த குரலில் கேட்டார்.
“அப்படி என்ன கட்டாயம்.?”
கான்ஸ்டபிள் கேட்டதும் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவரைப் பார்த்துச் சொன்னார்.
”பாட்டில் மூடி தொலஞ்சி போச்சு... சார்.!”
😂😂😂

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...