Sunday, October 29, 2017

இசைஞானியினின் இசையில்.......

** இசைஞானியின் குரலில் *** *** எனக்கு பிடித்த பாடல்கள் ** *இசைஞானியின் இசை மேடையில்*
*1985*ல்,*கோவை தம்பி*அவர்கள் தயாரிப்பில்,திரு.மணிரத்னம்* இயக்கத்தில்வெளியான. *இதய கோயில்*படத்தில் இடம்பெற்ற இப்பாடல்,இசைஞானியினின் இசையில், அவர் பாடிய பாடல்களில் மிக சிறந்த பாடல் என்று கருதுகிறேன்.
இப்படத்தில் இப்பாடலை SPB sir பாடி இருந்தாலும்,இசைஞானியின் குரலில் இந்த பாடலில் ஒருவித இனம்புரியாத ஈர்ப்பு, இருக்கும்.
**** ஒரு சிறிய பிளாஷ்பேக் ****
தயாரிப்பாளர் கோவை தம்பி- இளையராஜா கூட்டணியில் அணைத்து படங்களும் சூப்பர் ஹிட்.
*இதய கோயில்*படத்திற்கு முன்பாக,இவர்கள் கூட்டணியில் *பயணங்கள் முடிவதில்லை*, *உதயகீதம்*போன்ற படங்கள் இசைஞானியின் இசையால் வெற்றிபடங்களாக ஆகியிருந்த சூழ்நிலையில்,இதயகோயில் பாடல் பதிவின் போது நிகழ்ந்த சில கசப்பான நிகழ்வுகள் காரணமாக,இப்படத்தின் பாடல்களை கேட்டு,கோவைத்தம்பி அவர்கள் திருப்தி அடையவில்லை.
இசைஞானி இளையராஜா அவர்கள் தயாரிப்பாளர் கோவைத்தம்பி அவர்களை சமாதானப்படுத்தி, பாடல்கள் நன்றாக உள்ளது,நமது முந்தய படங்கள் போலவே இந்த படத்தின் பாடல்களும் பேசப்பட்டு படம்,வெற்றிப்படமாக அமையும், என்று உறுதியளித்ததன் பேரில், கோவைத்தம்பி அவர்கள் அரைமனத்துடன் சம்மதித்தார்.
* இதய கோயில் *படம் பாடல்களுக்காவே வெற்றிப்படமாக,மாறியது தமிழ் திரைஉலகம் அறிந்ததே.இதயக்கோயில் படத்தின் பாடல்கள் இசைஞானியின் இசைக்கான படங்களில் ஒன்றாகிப்போனது.
*அதன்பின் 7 வருடங்களுக்கு பின் 1992 ல் தான் கோவைத்தம்பியின் படத்திற்கு ( உன்னை வாழ்த்தி பாடுகிறேன்)இசைஞானி இசையமைத்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...