Friday, October 6, 2017

ஐந்து_நாட்கள்_பரோலில்_வெளியில்_இருக்கும்_வரையில்_சசிகலா_பின்பற்ற_வேண்டிய_நிபந்தனைகள்...!!!

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஐந்து நாள் பரோலில் வெளிவந்திருக்கும் சசிகலா, வரும் 11-ஆம் தேதி வரை தி.நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப் பிரியாவின் வீட்டில் தங்கவிருக்கிறார். அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்த வீட்டில் இருந்து தான் "பிரேக்கிங்" நியூஸ் வரும்.
இந்த ஐந்து நாட்கள் வெளியில் இருக்கும் வரையில், சசிகலா பின்பற்ற வேண்டி கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் விதித்துள்ள நிபந்தனைகள் ...
1. வீட்டிலிருந்து மருத்துவமணை மருத்துவமனையில் இருந்து வீடு தவிர, வேறு இடங்களுக்கு செல்லக்கூடாது.
2. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மருத்துவமனையில் இருக்க, சசிகலாவுக்கு அனுமதி உண்டு.
3. நள்ளிரவில் மிக அவசியமான சூழல் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தகவல் தந்துவிட்டு செல்லலாம்.
4. ஊடகங்களை சந்தித்து எந்த கருத்துக்களையும், சசிகலா தெரிவிக்கக்கூடாது.
5. பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில், சசிகலா பங்கேற்கக்கூடாது.
6. சசிகலா தாமாகவே, எந்த அரசியல்வாதியையும் அழைத்து சந்திக்கக்கூடாது, வீட்டுக்கு வருபவர்களை சந்திக்க தடையில்லை, என்று சசிகலாவுக்கு 6. நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
தனது கணவர் நடராஜனின் உடல் நிலையைக் காரணம் காட்டி, 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்த சசிகலாவிற்கு 5 நாட்கள் மட்டும் பரோல் கொடுத்து, கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் அனுமதியளித்தது. அதைத் தொடர்ந்து, அவரை காரின் மூலம் டிடிவி தினகரன் சென்னைக்கு அழைத்து வந்தார்.
இந்நிலையில், சென்னையில் அவர் எங்கு தங்கப் போகிறார் என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. அதில், சிறுதாவூர் பங்களா, போயஸ் கார்டன் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரின் வீடு என மூன்று இடங்கள் அடிபட்டன.
ஆனால், சசிகலாவின் உறவினரான இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் தங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த தகவலை, சசிகலா முறைப்படி சிறைத்துறை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். அதற்கு, சிறைத்துறை நிர்வாகமும் அனுமதி அளித்துள்ளது. அந்த விட்டிலேயே சசிகலா வருகிற 11-ஆம் தேதி வரை தங்கியிருப்பார் எனத் தெரிகிறது.
தி.நகர், ஹபிபுல்லா சாலையில் உள்ள 181 என்ற எண் கொண்ட அந்த வீட்டில் தான் சசிகலா தங்கப் போகிறார். சசிகலா இங்கு தான் தங்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்தபின், கிருஷ்ணப்பிரியாவுக்கு தமிழக காவல்துறை அதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டு, ‘இந்த வீட்டில் சசிகலா தங்கவிருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. இது வழக்கமான நடைமுறைதான். பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ எனக் கூறியிருக்கிறார். இதன்பிறகு தி.நகர் வீட்டுக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், ‘ எத்தனை ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருக்கிறீர்கள்? வீட்டின் பேரில் எதாவது வில்லங்கம் இருக்கிறதா?’ என்றெல்லாம் கேள்வி கேட்டு ஆய்வு நடத்தியுள்ளனர்.
சசிகலா அந்த வீட்டில் தங்கப்போவது தெரிந்ததும், அந்த வீட்டின் முன்பு சசிகலாவின் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். அங்கு பேனர்களும் வைத்துள்ளனர். எனவே, உயர் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
என்னதான் கணவரின் உடல்நிலையைக் காரணம்காட்டி சசிகலா வெளியே வந்தாலும்,அது உண்மை யான காரணமில்லை. கட்சி மற்றும் கட்சி சார்ந்த விஷயங்களை ஆய்வு செய்யவே அவர் வெளியே வந்திருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய ‘தலைகள்’ பல தன்னை சந்திக்க நேரிடும் என சசிகலா நம்புகிறாராம். இவ்வளவு நாள் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பல விசுவாச ரத்தத்தின் ரத்தங்களும் தன்னை வந்து சந்திப்பார்கள் என எதிர்பார்த்து காத்து உள்ளாராம் சசிகலா....???...!!! இன்னும் 5 நாட்களில் என்னதான் நடந்துவிடும் பார்க்கலாம்...!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...