Tuesday, October 17, 2017

“சூடு சொரணை ஏதும் உனக்கு இல்லையா?” – என்ற கேள்விக்கு புத்த‍ரின் பதில் . . .

புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க்கொண்டிருந்தா ர். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிரா மத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப் படுத்தல்கள். புத்தரோ அமைதி யாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்க ளுக்கே அவமானமாகி விட்டது. “யோவ்.. இவ்ளோ திட்டறோமே, சூடு சொரணை ஏதும் உனக்கு இல்லையா?” என்று கடைசி யில் கேட்டேவிட்டார்கள். புத்தர் சிரித்தார்.
“இதுக்கு முன்னால் நான் போன கிராம த்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார் கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்துவிட்டுப் போகப்போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.
நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...