Friday, October 6, 2017

நாழிக்கிணறு.

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே அமைந்துள்ள நாழிக்கிணற்றை பற்றி சில தவறான கருத்துகள் சமூகவலை தளங்களில் வந்து கொண்டிருக்கின்றன.
அவற்றில்:
1. கடற்கரையின் நிலப்பரப்பிற்கு அடியிலுள்ள நீர் கடல் மண்ணிணால் வடிகட்டப்பட்டு உவர்ப்பு நீங்கி இனிப்பு சுவையுடன் உருவெடுக்கிறது.
அதனால்தான் நாழிக்கிணற்றில் சுவையான தண்ணீர் கிடைகிறது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவர்களது ‘அறிவியல்’ கருத்து சரியாக இருந்தால் திருச்செந்தூர் கடற்கரையை ஒட்டியுள்ள அனைத்து கிணறுகளிலும் நல்ல சுவையுடன் தண்ணீர் இருந்திருக்க வேண்டும்.
மாறாக கடல் தண்ணீரைவிட அதிகமான உப்புதன்மையுடன் அல்லவா தண்ணீர் இருக்கிறது?
அது ஏன்? நாழிக்கிணற்றில் மட்டும் தண்ணீர் வடிகட்டபடுவதர்க்கு காரணம் என்ன?
2. முருகப்பெருமான் தனது படைவீரர்களின் தாகத்தினை தீர்ப்பதற்காக தன் வேலினால் இந்த கிணற்றை உருவாக்கியதாக கூறப்படும் புராணக்கதையை கிண்டல் செய்து ஒருவர், நாழிக்கிணறு இயற்கையாக அமைந்த ஊற்று என்றும் செயற்கையாக யாரும் உருவாக்கவில்லை என்று கருத்து தெரிவிக்கிறார்.
ஆனால் தரை மட்டத்திலிருந்து 35 அடிகள் தோண்டியபின் கிடைக்கும் ஊற்றை யாரும் இயற்கையாக அமைந்த ஊற்று என்று கூறுவதில்லை!
செயற்கையாக தோண்டப்பட்ட கிணற்றில் காணப்படும் ஊற்று என்றுதான் கூறுவார்கள்.
சுற்று வட்டாரத்தில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவுவரை எங்குமே நல்ல தண்ணீர் கிடைக்காத ஒரு கடற்கரை பாலைவனத்தில், 35 அடிகள் ஆழம் தோண்டி அதில் நல்ல தண்ணீரை ஒருவர் கண்டுபிடித்து கொடுத்தால் அவரை கடவுளுக்கு சமமாக மதிப்பதில் என்ன தவறு இருக்கிறது..?
இத்தனைக்கும், நாழிக்கிணறு கடற்கரையிலிருந்து நூறு அடி தொலைவில்தான் உள்ளது.
அதைவிட வியப்பு, நாழிக்கிணற்றின் நீர்மட்டம், கடல் மட்டத்தைவிட 15 அடிகள் தாழ்வான நிலையிலிருப்பதுதான்.
அதைவிட பெரிய வியப்பு, திருச்செந்தூர் கடற்கரை பகுதியில், நாழிக்கிணற்றை தாண்டி சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவுவரை நிலத்தடி நீரில் கடல்நீர் கலந்து மாசு அடைந்துவிட்ட நிலையில், நாழிக் கிணற்றில் மட்டும் தண்ணீர் மாசடையாமலிருப்பது!
நாழிக்கினற்றை பொறுத்தவரை இதுபோன்ற ‘வியப்புகளை’ அடுக்கிகொண்டே போகலாம்.
இதற்கு அறிவியல் ரீதியாக தற்போது நம்மிடம் பதிலில்லை என்பதுதான் உண்மை.
ஆனால், இந்த கிணற்றை தோண்டியவர்களுக்கு இந்த வியப்புகளுக்கெல்லாம் பதில் தெரிந்திருக்கிறது என்பதுதான் உட்ச்சகட்ட வியப்பு.Image may contain: outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...