Thursday, October 26, 2017

திருச்சி கிறித்தவ பள்ளி அடாவடி!

தீபாவளி கொண்டாடியவர்கள் "இருளின் பிள்ளைகள்" 

பாலக்கரையில் உள்ள Servite Matriculation பள்ளியில் தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளி திறந்த கடந்த 19 ஆம் தேதி இறைவணக்க நேரத்தில் யார் யார் தீபாவளி கொண்டாடவில்லை என்று முதல்வர் லில்லி ஆன்டனி கேட்டிருக்கிறார். கை உயர்த்தியவர்களை தனியாக அழைத்துச் சென்று பாராட்டியிருக்கிறார். உள்ளங்கையில் மருதாணி இட்டு, பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர் ஒருவன் அடித்திருக்கிறான். அந்த மாணவிகளை "இருளின் பிள்ளைகள்" என்று சாபமிட்ட பள்ளி முதல்வர், தீபாவளி கொண்டாடிய குற்றத்திற்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கிறார். 
பிள்ளைகள் பள்ளியில் நடந்ததை பெற்றோரிடம் சொல்ல... விவகாரம் இப்போது காவல்நிலையத்தில்! 

இந்த மத வெறியர்களை என்ன செய்வது? 
இப்படி ஒரு முட்டாள்தனமான செயலை மதத்தின் பெயரால் எப்படி அனுமதிக்க முடியும்? 
காட்டுமிராண்டிகளே... திருந்துங்கள்!! 
மதம் ஒரு அபின்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...