Monday, October 9, 2017

தடைகளை வெல்வது எப்படி?

*இனிய அன்பு வணக்கம்.*

இன்றைய நாள்
உங்களுக்கு
உற்சாகமாகவும்,
உத்வேகமும்
தரும் நாளாக
அமையட்டும்.

*இன்றைய சிந்தனை.*
🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅
*''எறும்புகள் கற்றுத் தருகின்றன.''*
🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅
தலைப்பைப் படித்ததும் இது சிறுவர்களுக்கான
கதை என நினைத்து விடாதீர்கள். இது நமக்கானது. முழுவதையும் படியுங்கள்.
இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான்.
நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே என்று சொல்வதுண்டு.
அதாவது, எவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ, அவன் தனக்குத்தானே நண்பனாவான்.
யார் ஒருவன் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறானோ அவன் அவனுக்கு எதிரி ஆவான் என்று அர்த்தம்.
கவலைப்படுபவர்கள் இந்தியாவில் மட்டுமில்லை.
உலகம் முழுவதுமே இருக்கிறார்கள்.சமீபத்தில் கவலை குறித்து அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
அதன் முடிவில் 40 சதவீதக் கவலைகள் எந்த அடிப்படைக் காரணமும் இல்லாத தேவையற்றவை.
30 சதவீதக் கவலைகள் கடந்த காலம் பற்றியவை.
12 சதவீதக் கவலைகள் பிறர் பற்றியது.10 சதவீதக் கவலைகள் நம் நோய் நொடிகள் பற்றியவை.
அது கூட கவலைப்படும் அளவுக்கு இல்லாமலும் இருக்கலாம். மீதம் உள்ள 8 சதவீதம் மட்டுமே உண்மையான கவலைகள் எனக் கண்டறியப்பட்டது.
பெரும்பாலான சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்து இருக்கிறது என்பது புரியும்.
அது போன்றுதான் தோல்வியும். தோல்வி என்பது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அறிவிப்பு என்று சொல்லலாம்.
செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பு ஆகாது. உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும்.
ஆனால்,
நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம் என்று சொல்வார்கள். தடைகளை வெல்வது எப்படி? இதை எறும்புகள் நமக்கு கற்றுத் தருகின்றன.,
போகும் வழியில் தடைகள் ஏற்பட்டால் அந்த தடையையே பாலமாக வைத்து முன்னேற வேணடும் என்பதை நாம் எறும்பிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆம்..
நண்பர்களே...
*ஒரு மிகச்சிறிய உயிரியான எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் கூடப் போதும், எந்தத் தடையையும் வெல்ல முடியும். கவலையும் காணாமல் போய் விடும்.*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அன்புடன் : *
இரா.வே.கிருஷ்ணன்.*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸Image may contain: nature, text and outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...