Sunday, May 26, 2019

இதுதான் உண்மை -

இன்று இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களை ஆண்டு வரும் ஒரு கட்சி -
அற்புதமான பிரதமரைக் கொண்டு,
அப்பழுக்கற்ற ஆட்சியைத் தந்து கொண்டிருக்கும் ஒரு கட்சி -
ஏன் தமிழகத்தில் மட்டும் இத்துனை எதிர்ப்பு? -
ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி -
மதச் சிறுபான்மையினர் எதிர்க்கக் கூட காரணங்கள் உண்டு -
ஆனால்,
ஆன்மிக பூமியான தமிழகத்தில்,
பழனி முருகனுக்கு பாதயாத்திரை செய்பவர்களும்,
சபரிமலைக்கு மாலையணிந்து செல்பவர்களும் சில கோடிப் பேர் -
அன்றாடம் கோவிலுக்குச் செல்பவர்கள் சில கோடிப் பேர் _
இவர்களின் ஆதரவைக் கூட ஒரு ஆன்மிகக் கட்சியால் பெற முடியவில்லையே ஏன்?-
நாத்திகர்கள் ,சிறுபான்மையினர் தவிர கடவுள் நம்பிக்கையுள்ள ஆத்திகர்களும் எதிர்க்கிறார்களே அவர்கள் யார்?-
அவர்களில் பெரும்பாலானவர்கள், தலித்துக்கள் என்ற புதிய அடைமொழியைக் கொண்ட தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் - ஏன்?
இங்கே, ஒரு நூற்றாண்டுகாலமாகவே பிராமணர் எதிர்ப்பு கோஷம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது?
அதனாலேயே இட ஒதுக்கீடு வந்தது -
அதனாலேயே திராவிடக் கட்சிகள் இங்கு பலம் பெற்று அரியனைகளைப் பிடித்தன,
அதுவே, இன்று ஒட்டுமொத்தமாக இந்து தர்மத்தை எதிர்த்தும் நிற்கிறது -
வெறும் 3% பிராமணர்களை எதிர்க்க எதற்கு இவ்வளவு பேர்?
வர்னாசிரம தர்மம் என்பது என்ன?-
உண்மையாகவே .இந்தப்படி நிலைகளை மநு கூறியிருக்கிறாரா?
கீதையில் கண்ணன் இதைப் பற்றி கூறி இருக்கிறாரா?-
ஒருவன் பிறக்கும்போதே இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் இவன் இதைத்தான் செய்ய வேண்டும் என்று ஒரு கடவுளோ , வேதமோ, மதமோ உண்மையாகவே கூறி இருக்கத்தான் முடியுமா? -
இருக்கவே இருக்காது -
தன்னைப்போல் பிறரையும் நினை- என்றுதான் கூறியிருக்க வேண்டும் -
பின்பு எப்படி இந்த வருனமுறை வேரூன்றியது (?) -
உண்மையிலேயே ஆதிகாலத்தில் இருந்து அப்படித்தான் இருந்ததா? அல்லது இடையில் திணிக்கப்பட்டதா?-
சந்தேகமே இல்லாமல் இடையில் திணிக்கப்பட்டதுதான் -
ஆனால், இதன் உண்மைத்தன்மையை மறைத்து பரவிய செய்தியையே உண்மையாக இருக்க வேண்டும் என்று இரு எதிர் எதிர் அணிகளும் நினைப்பது தான் வேதனை _
ஒருபுறம் பிராமணர்கள் - பொய்யாகக் கூறப்பட்டவர்ணாசிரம தர்மத்தில் தாம் உயர்ந்த வர்ணமாக இருப்பதையே தொடர விரும்புகிறது -
மற்றொரு புறம் பிராமண எதிர்ப்பைக் காட்டியே தாழ்த்தப்பட்டோரின் வாக்குகளை பெற்று ஆள நினைக்கும் ஒரு கூட்டம் -
இருவருக்குமே ஆதாயம் தான் -
ஆனால், உண்மை தான் என்ன?-
மநு விலும் , கீதையிலும் என்னதான் கூறி இருக்கிறது -
"சாதுர்சாதுர்வர்ணம் மயா ஸ்ருஷ்டம்
குண கர்ம விபாகசஹ "
ஒருவர் பிறப்பால் எந்தத் தகுதியும் அடைவதில்லை
"ஜன்மனாம் ஜாயதே சூத்ரஹ"
பிறப்பால் மட்டுமே ஒருவன் பிராமணன் கிடையாது -
பிறப்பால் பிராமணனாகப் பிறந்த வாஞ்சிநாதனும், பாரதியும், சுப்ரமணிய சிவாவும் இவ்வுலகின் பார்வையில் சத்ரியர்களே -
பிறப்பால் சூத்திரனாகப் பிறந்த அப்துல்கலாம் இவ்வுலகின் பார்வையில் பார்பணரே -
பிறப்பால் சத்திரியனாகப் பிறந்த முத்துராமலிங்கத் தேவர் - இவ்வுலகின் பார்வையில் பார்ப்பணரே -
பிறப்பால் வைசினாகப் பிறந்த மோடி அவர்கள், இவ்வுலகின் பார்வையில் ஒரே நேரத்தில் சத்ரியனாகவும், பிரமாணளாகவும் காட்சியளிக்கிறார் -
பிறப்பால் சத்ரியனாக பிறந்திருந்தாலும் தனது நடவடிக்கைகளால் சூத்திரனாகிப் போனவர் ஈ.வே.ரா.-
ஆனால், பிறப்பால் பிராமணனாகப் பிறந்த கமலஹாசன் தனது செயல்களால் சூத்திரனாகிப் போனான் -
ஆனால், பெரும்பாலான பிராமணர்கள் இதை சாதகமாகப் பயன்படுத்தி தனது வர்ணத்தை மேலேயே வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் -
அவர்களுக்குள்ளேயே பிரிவுகள் வேறு -
எனக்குத் தெரிந்து வைணவத் தலமான ஸ்ரீரங்கத்தில் சிவ, சிவ என்று கூறிய பெண்னை தரிசனம் செய்ய விடாமல் விரட்டிய சம்பவம் நடந்தது -
வைணவ தலத்தில் கூட வடகலை, தென்கலை பிரச்சினை நடந்து வருகிறது -
திருச்செந்தூரில் நான் நேரில் பார்த்த அளவிற்கு ஐயர்களின் ஆர்ப்பாட்டம் எங்கும் இல்லை -
ஒருபுறம் தர்ம தரிசன கூட்டம், ஒரு புறம் கட்டண தரிசனக்கூட்டம் என்றால் மறுபுறம் இவன்களின் கமிஷன் தரிசனக்கூட்டம் மிக, மிக அதிகம் -
ஒன்று, பிராமணர்கள் தானாகத் திருந்த வேண்டும் -
அல்லது, இன்னும் அதிகமாக அடிபட்டாலும் திருந்த வாய்ப்பில்லாமல் நமது கோவில்களையும் இழந்து விட நேரிடும் -
நான் பிராமணர்களைப் பற்றி உயர்வாகப் பதிவிடும் பொழுதெல்லாம் ஆதரவு தெரிவித்த அதே நண்பர்கள் -
சில உண்மைகளைப் பதிவிடும் பொழுது என்னை கரித்துக் கொட்டுவது வேதனை அளிக்கிறது -
நான் சாதியவாதியாக இருந்திருந்தால் சசிக்கலாவையும்,TTV யையும் பற்றி கேவலமான பல பதிவுகள் இட்டிருக்க மாட்டேன் -
என்னைத் தொடர்ந்து பின் தொடர்பவர்களுக்குப் புரியும் -
உண்மையில் -
"சாதுர்சாதுர்வர்ணம் மயா ஸ்ருஷ்டம்
குண கர்ம விபாகசஹ "
ஒருவர் பிறப்பால் எந்தத் தகுதியும் அடைவதில்லை
"ஜன்மனாம் ஜாயதே சூத்ரஹ"
இதுதான் உண்மை -
பிறக்கும் பொழுது நம் அனைவரும் சூத்திரரே - இது எனக்குத் தெரியும் -மேலும் _
பிறப்பால் எவனும் ப்ராமணன் ஆக முடியாது என்பதை கமலஹாசன் இன்றைய நவீன உலகில் உணர்த்தியே விட்டார் -
அதனால், இதன் உண்மை நிலையை எடுத்துக் கூறி சாதி படிநிலைகளைய,
சாதிய அடையாளங்களை நீக்க பாரதிய ஜனதா கட்சி - முனைய வேண்டும் -
இல்லையென்றால் ஒரு புறம் - பார்பணர்கள் கட்சி என்ற பெயர் நிலைத்து விடும் -
மறுபுறம் தமிழகத்தில் பா.ஜ.க வளர்வதென்பது கடினமாகி விடும் -
இந்து தர்மமும் இந்த பிரிவினைகளைக் காட்டி மதம் மாற்றும் கும்பலுக்கு பலியாகிவிடும் -
சாதி வேறுபாடுகளைக் களைந்து இந்துக்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும். இதுவே நம் இலட்சியம் -

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...