Saturday, May 25, 2019

வாழைப்பழம்_தின்றால்_சளிபிடித்துக்_கொள்கிறதா?????


உண்மையில், பழம் சளியைத் தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டுவரும் வேலையைத்தான் பழம் செய்கிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நமது அன்றாட உணவில் ஒரு வேளை உணவாக வாழைப் பழத்தை உண்டு வந்தால்.....
* ஒரு வாழைப்பழத்தில் 75சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்ச்சத்து 16சதவிகிதம், வைட்டமின் சி 15 சதவிகிதம் மற்றும் பொட்டாசியம் 11 சதவிகிதம் உள்ளது.
* நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ அமிலங்கள் இருக்கிறது. இதன் தோலை மீறி எந்த ஒரு கிருமியும் உள்ளே செல்ல முடியாத பாதுகாப்பு நிறைந்த இயற்கையின் அற்புதப் படைப்பு.
* வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவும், உப்பு குறைந்த அளவும் இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
* இரும்புச்சத்து போதுமான அளவில் இருப்பதால் இரத்தசோகை இருப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்தது.
* தோலின் உட்புறத்தை, நமது சருமத்தின் மீது தேய்த்தால் கொசு நம்மை அண்டுவதில்லை.
* வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், அளவுக்கு அதிகமாக மது குடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன. மது குடிக்கும் பழக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கச் செய்கின்றது.
* நினைவு ஆற்றலை தக்கவைத்துக் கொள்வதில் வாழைப்பபழம பெரும்பங்கு வகிக்கிறது.
வாழைப்பழத்தில் உள்ள பி6 மற்றும் பி12 வைட்டமின்கள், புகைபிடிக்கும் பழக்கத்தையும் கைவிட உதவும்.
* கடுமையான வயிற்றுப் போக்கை தடுப்பதற்கும், மலச்சிக்கலைப் போக்கவும் வாழை அருமருந்தாகத் திகழ்கிறது.
* வயிற்றில் அமிலம் சுரப்பதையும், அல்சர் எனப்படும் புண் ஏற்படுவதையும் வாழை தடுக்கிறது.
* குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் ஆண்டு முழுவதும் சீசன் உள்ள வாழைப்பழத்திற்கு, நமது நாட்டில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் கடும் கிராக்கி உள்ளது.
* வாழைப்பழம் கிடைக்காத சில நாடுகள் கூட பிறநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்துகிறார்கள்.
* நாம் வாழைப்பழத்தில் இருக்கக் கூடிய ஆற்றல்களை அனுபவத்தில் அறியாது அதனை உதாசீனப்படுத்துகிறோம்.
* பழம் தின்றால் சளி பிடித்துக் கொள்கிறது என்றுகூறி தவிர்த்துவிடுகிறோம். உண்மையில், பழம் சளியைத் தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டுவரும் வேலையைத்தான் பழம் செய்கிறது.
* பிரிட்டனைச் சேர்ந்த"தி நியூ இங்லாண்ட் ஜர்னல் ஆப் மெடிசன்" என்ற பத்திரிகையில் வாழைப்பழம் குறித்து ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது அதில், "வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்பை, 40 சதவிகிதம் குறைக்க முடிகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...