Monday, May 27, 2019

பாஜக மீண்டும் ஆட்சியமைத்து, தமிழகத்திற்கு ஏற்படப்போகும் பாதிப்புகள்/இழப்புகள் என்னென்ன...

* 7 தமிழர் விடுதலை இப்போதைக்கு சாத்தியமில்லை
* நீட் தேர்விற்கு விலக்கு கிடையாது
* பொறியியல் படிப்பிற்கும் நீட் தேர்வு கொண்டுவரப்படும்
* ஹைட்ரோகார்பன் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும்
* பெட்ரோலிய மண்டலம் திட்டம் செயல்படுத்தப்படும்
* டெல்டா விவசாய நிலத்தில் கெயில் குழாய் பதிக்கப்படும்
* சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படும்
* 8 வழி சாலை திட்டத்திற்கு விவசாய நிலங்கள் பிடுங்கப்படும்
* அதற்கான நிவாரணம் முன்பு அறிவித்தது போல் இருக்காது
* ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்
* ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் பெறும்
* நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும்
* பாதுகாப்பு காரணம் காட்டி முல்லை பெரியாறு நீர்மட்டம் குறைக்கப்படும்
* கூடங்குளத்தில் மேலும் சில புதிய அணுஉலைகள் நிறுவப்படும்
* அணுக்கழிவுகள் தமிழகத்திலேயே புதைக்கப்படும்
* கர்நாடகா மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்படும்
* காவிரியில் இனி தண்ணீர் வரப்போவதில்லை
* தமிழகத்தில் இராணுவ தளவாட உற்பத்தி மையங்கள் உருவாக்கப்படும்
* அதனையொட்டி புதிய இராணுவ படைத்தளம் உருவாக்கப்படும்
* இப்பகுதிகள் பாரத்மாலா திட்டத்தின் கீழ் 6/8 வழி சாலைகளால் இணைக்கப்படும்
* சாகர்மாலா திட்டத்தின் கீழ் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் பெரும்
* CRZ திட்டத்தின் கீழ் கடற்கரையில் கார்ப்பரேட்கள் கட்டுப்படுத்தக்கூடிய புதிய சுற்றுலா தளங்கள் உருவாக்கப்படும்
* மீனவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு மீன்பிடி தொழில் கார்ப்பரேட் வசம் வழங்கப்படும்
* மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்ய கார்ப்பரேட்களுக்கு அனுமதி அளிக்கப்படும்
* புதிய துறைமுக திட்டங்கள் உருவாக்கப்பட்டு அதானிக்கு வழங்கப்படும்
* கன்னியாகுமரி துறைமுக திட்டம் செயல்படுத்தப்படும்
* தனுஷ்கோடி இராணுவ/ஆன்மீக பகுதியாக மாற்றப்படும்
* மேலும் பல ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படும்
* கோவை போன்று சூயஸ் நிறுவனம் தண்ணீர் விநியோகிப்பது பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்
* பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தமிழக ஆறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்கப்படும்
* ஆற்று மணல் கொள்ளை சட்டப்பூர்வமாக நடக்கும்
* மாவட்டம் தோறும் நவோதயா பள்ளிகள் திறக்கப்படும்
* அதில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்கும்
* அதிகளவில் CBSC பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்படும்
* தமிழக அரசின் துவக்கப் பள்ளிகள் மூடப்படும்
* 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை கொண்டு வரப்படும்
* 11, 12 வகுப்புகளுக்கு ஆங்கிலம் அல்லது தமிழை தேர்ந்தெடுக்கும் முறை கொண்டுவரப்படும்
* மருத்துவ கட்டமைப்பை இந்தியா கொள்ளையடிக்கும் அல்லது நாசப்படுத்தும்
* பல்கலைக்கழகங்கள் இந்திய அரசு கட்டுப்பாட்டில் செல்லும்
* பல்கலைக்கழக துணைவேந்தர்களாக வடஇந்திய ஆர்எஸ்எஸ் ஆட்கள் மட்டுமே நியமிக்கப்படுவர்
* வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் புதிய கல்வி நிறுவனங்களை துவங்க அனுமதி அளிக்கப்படும்
* உயர் கல்விக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும் கட்டுப்பாடு இந்திய அரசிற்கே இருக்கும்
* பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடு அனைத்து துறைகளிலும் அமல்படுத்தப்படும்
* தமிழக அரசு வேலை வாய்ப்புகள் வட இந்தியர்களுக்கு வழங்கப்படும்
* தமிழகத்தில் ஒன்றிய அரசு வேலைகள் 100% வட இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்
* 69% இடஒதுக்கீடு சரிவர பின்பற்றப்படாது
* கீழடி வரலாறு மூடி மறைக்கப்படும்
* புதிய தொல்லாய்வுக்கு அனுமதி கிடையாது
* தமிழன்னை சிலை என்ற பெயரில் ஆரியமாதா சிலை அமைக்கப்படும்
* கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்படும்
* அங்கு விவேகானந்தர் அல்லது பாரத மாத சிலை வைக்கப்படலாம்
* கொங்கு பகுதி விவசாய நிலங்கள் ஊடாக கெயில் குழாய் பதிக்கப்படும்
* விவசாய நிலங்கள் ஊடாக உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்படும்
* கிழக்கு தொடர்ச்சி மலைகள் வெட்டப்பட்டு கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படும்
* அதானியின் சூரிய மின்சார திட்டம் விரிவாக்கப்படும்
* புதிய எண்ணெய் கிணறுகள் தோன்றும்
*தமிழக அரசின் அறநிலையத்துறை பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் செல்லும்
* ஆர்எஸ்எஸ், இந்துத்துவ அமைப்புகள், ABVP கிளை பரப்பும்
* அம்மன் கோவில்களில் மஞ்சள் நீக்கப்பட்டு காவி நிறம் ஆக்கிரமிக்கும்
* தெரு, ஊர் பெயர் மாற்றம் என்ற பெயரில் சமஸ்கிருதம் திணிக்கப்படும்
* அண்டை மாநிலங்களில் கூலி வேலைக்கு செல்பவர்கள் கொல்லப்படுவது அதிகரிக்கும்
* பொய் செய்திகள் அதிகளவில் பரப்பப்படும்
* மதுபான கடைகள் அதிகரிக்கும்
* வடஇந்தியர் குடியேற்றம் அதிகரிக்கும்
* கொலை, கொள்ளை குற்ற செயல்கள் அதிகரிக்கும்
* சிறுபான்மையினர் மீதான குற்ற செயல்கள் அதிகரிக்கும்
* பசு பாதுகாப்பு பெயரில் இஸ்லாமியர்கள், தலித்துகள் அடித்து கொல்லப்படுவர்
* காவல்துறையின் முக்கிய பொறுப்புகள் அனைத்தும் வடஇந்திய அதிகாரிகளால் நிரப்பப்படும்
* தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களும் வடஇந்திய அதிகாரிகளாக இருப்பர்
* ஒன்றிய அரசின் திட்டங்களை மட்டுமே தமிழக அரசு செயல்படுத்தும்
அப்புறம் இவைகளுக்கு எதிராக போராடினால் துப்பாக்கி சூடு நடத்தப்படும்.
(பட்டியலில் நிறைய விடுபட்டிருக்கலாம். குறிப்பிட்டால், இணைத்துக்கொள்ளப்படும்). 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...