Tuesday, May 7, 2019

பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்.

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும், பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரத்தில் வெயிலில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 
தமிழகத்தில் அக்னிநட்சத்திர காலம் தொடங்கி உள்ள நிலையில் பல ஊர்களில் பகல் நேர வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது.
சென்னையில் 105 டிகிரியாகவும், வேலூரில 111.2 டிகிரியாகவும் பகல் நேர வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதே போன்று சேலத்தில் 105.8 டிகிரியாகவும், திருச்சியில் 107.6 டிகிரியாகவும், நாமக்கல்லில் 107.6 டிகிரியாகவும், ஈரோட்டில் 105.8 டிகிரியாகவும், கோவையில் 98.6 டிகிரியாகவும், மதுரையில் 111.2 டிகிரியாகவும், திருநெல்வேலியில் 100.4 டிகிரியாகவும், தூத்துக்குடியில் 104 டிகிரியாகவும் வெப்பம் பதிவாகி உள்ளது.
இந்நிலையில் அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்றுவீசும் என்று கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலாக நேரத்தில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது.
இதே நேரத்தில் தமிழக வளிமண்டலத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கில் நிலவும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும், இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தை ஒட்டிய வங்க கடல் பரப்பின் தெற்கு மற்றும் தென்மேற்றில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் எச்சரிக்கையுடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னை திருவொற்றியூரில் வெயிலில் சைக்கிள் ஓட்டி சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருவொற்றியூர் காட்டு பொன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் திசைகரபாண்டியன் இன்று காலை அருகில் உள்ள வங்கிக்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.
பணம் எடுத்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் திருவொற்றியூர் தேரடி அருகே திடீரென சுருண்டு மயங்கி விழுந்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் திரைகரபாண்டியனை பரிசோதனை செய்தனர்.
அப்போது அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...