வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள் தமிழக மாவட்டங்களில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 8 சென்டிமீட்டரும், வேலூரில் 5 சென்டிமீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் பேனுகொண்டபுரத்தில் 3 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வேலுார், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்தது.
அக்னி நட்சத்திரி கத்திரி வெயில் தாக்கத்தினால் கடும் வெப்பம் நிலவும் சூழலில், மழைக்கான முன்னறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சி கலந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
உள் தமிழக மாவட்டங்களில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 8 சென்டிமீட்டரும், வேலூரில் 5 சென்டிமீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் பேனுகொண்டபுரத்தில் 3 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வேலுார், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்தது.
அக்னி நட்சத்திரி கத்திரி வெயில் தாக்கத்தினால் கடும் வெப்பம் நிலவும் சூழலில், மழைக்கான முன்னறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சி கலந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment