வெளிமாநிலத்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்கி அதிமுக பா.ஜ. க. அரசுகள் தமிழர்களுக்கு துரோகமிழைத்து விட்டன - ஸ்டாலின்.
1) பிற மாநிலத்தவர்கள் என்றால், ஹிந்தி பேசும் மக்களை மட்டும் குறிப்பிடுகிறாரா..அல்லது தமிழர்களை தவிர்த்து அனைத்து பிற மாநில மக்களையும் ஸ்டாலின் குறிப்பிடுகிறாரா..?
2)ஸ்டாலின் தனது குடும்பத்தினர்கள் நடத்தும் தொலைக்காட்சிகள் உட்பட அத்தனை தொழில் நிறுவனங்களிலும் எத்தனை தமிழர்கள் எத்தனை பிற மாநிலத்தவர்கள் பணிபுரிகிறார்கள் என்ற விவரத்தை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
3)பிற மாநிலங்களில் வேலை செய்யும் தமிழர்கள் அந்த வேலைகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் கூறுகிறாரா..?
4) பிற மொழி பேசும் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கக் கூடாது என்றால், பிற மொழி பேசும் மக்களுக்கு தேர்தலில் எம்.பி,.எம்..எல்.ஏ. சீட்டுக்களை மட்டும் ஸ்டாலின் ஏன் வழங்கினார்..?
5) ஸ்டாலினின் இந்தக் கருத்தை அவர் பிரதமராக அறிவித்திருக்கும் ராகுல் ஏற்றுக் கொள்கிறாரா..காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறதா..?
No comments:
Post a Comment