Monday, August 29, 2011

தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ...அவர்களை தூக்குகயிறு நெரிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது

பேரறிவாளன், சாந்தன், முருகன்


பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத்தண்டனை அறிவிப்பு ஏனோ
இலங்கை பொருளாரத்தடை தீர்மானங்களை திசைதிருப்பவவோ என்று தோன்றுகிறது.
சுமார் 11 ஆண்டுகள் தள்ளிப்போடப்பட்டு வந்த கருணை மனு மீதான முடிவு ,அரசியல்
காரணங்களுக்க்காகவே இப்போது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் நடந்து வரும் போராட்டங்களும் ,ஆர்ப்பாட்டங்களும்
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழுணர்வு தமிழனிடத்தில் மேலோங்கி வருவதாக மகிழ்ச்சியளிக்கிறது.

காந்தியின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்த காங்கிரசின் காழ்ப்புணர்ச்சி நாடகங்கள் வெட்ட வெளிச்சமாகி வருகின்றன.

லட்சம் பேரை கொன்று குவித்த ராஜபக்சே என்ற ராட்சசனை ஒன்றும் செய்ய இயலாது என சொல்கிறார் எஸ்.எம்.கிருஷ்ணா .
மறுபுறம்,குற்றம் முழுதாக நிருபிக்கப் படாமலே மூவர் தூககிலிடப்படப் போகிறார்கள் .

இலங்கை போர் ,மீனவர் படுகொலை,இன்னும் பிற விசயங்களில் தமிழனின் உயிர் துச்சமாகவே துண்டாடப் பட்டு வருகிறது.
தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் அரசியல் லாப செயல்களுக்கும் இதில் பெரும் பங்குண்டு.
மரண தண்டனை அவசியமற்றது எக்காலத்திலும் ! எதற்காகவும் !
கடவுளே இல்லை என்பவனும் ,கடவுளையே வேண்டும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான் இப்போது இந்த மூவருக்காக..
வேறொன்றும் வழி இருப்பதாய் தோன்றவில்லை ,தமிழனாய் பிறந்ததுக்கு அழுவதை தவிற..

 
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படகூடும். மூவரினதும் வாழ்வின் நாட்கள் நிமிடங்களாகவும், செக்கன்களாகவும் சுருங்கிக்கொண்டே போகின்றன.கலகம் அடக்கும் காவல்துறையும், மத்திய ரிசேவ் ஆயுதக்காவல் பிரிவும் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் ஒழுங்கை காரணம்காட்டி நாளையோ மறுநாளோகூட தண்டனை யை நிறைவேற்ற ஆளும்தரப்பு அவசரம் காட்டுகின்றது.
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ...அவர்களை தூக்குகயிறு நெரிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது.நாம் ஒருகணமும் தாமதிக்காமல் உடனடியாக செயற்படவேண்டும். இந்த தூக்கு தண்டனையை நிறுத்தும் சட்ட அதிகாரம் உள்ளவர்களிடமும், தூக்குதண்டனைக்கு எதிரான சர்வதேச நிறுவனங்களிடமும் இப்போதே நீதிகேட்டு மின்னஞ்சல்களையும், தகவல்களையும் அனுப்புவோம்.சாத்தியமான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி இந்த மூவரின் தூக்குதண்டனையை நிறுத்த இப்போதே முயல ஆரம்பிப்போம்.....
Send E-mail to Indian Government:
------------------------------
-------------

Her Excellency Smt. Pratibha Devisingh Patil
President of India
presidentofindia@rb.nic.in

Sri M.Hamid Ansari
Vice-President of India
vpindia@nic.in

His Excellency Mr. Manmohan Singh
Prime Minister of India
manmohansingh@sansad.nic.in

Mr. P.CHIDAMBARAM
Home Minister of India
hm@nic.in

Hon'ble Mr. Justice S.H. Kapadia
Supreme Court of India
supremecourt@nic.in

Smt.Sonia Gandhi
soniagandhi@sansad.nic.in
President, Indian National Congress

Shri L.K. Advani
Leader of Opposition in the Lok Sabha
advanilk@sansad.nic.in

Smt.Meira Kumar
speakerloksabha@sansad.nic.in
Hon’ble Lok Sabha Speaker

His Excellency Thiru Surjit Singh Barnala
Governor of Tamil Nadu
govsec@tn.nic.in

Dr. J. Jayalalitha
Chief Minister of the state of Tamil Nadu
cmcell@tn.gov.in

Hon. Justice Shri K.G. Balakrishnan
National Human Rights Commission of India
chairnhrc@nic.in

Send E-mail to Intl. Organisations against Death
-----------------------------------------------------------
Penalty:
---------
இந்தியஅரசே
மரண தண்டனை சட்டப்பிரிவை உடனே இரத்து செய்.
இப்பது உள்ள மரண தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மாற்று.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...