Friday, August 19, 2011

புதிய தலைமை செயலகத்தில் மருத்துவமனை- அனைத்து கட்சியினரும் வரவேற்பு

சட்டசபையில் 110-வது விதியின்கீழ் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-  
 
நோய் இன்னதெனக் கண்டறிந்து, பின் அது உண்டான காரணத்தை அறிந்து, அதன் பின் அந்நோயைத் தீர்ப்பதற்கான வழிமுறையைக் கையாண்டு, நோய் நீங்க மருத்துவம் செய்ய வேண்டும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, அனைவருக்கும் சுகாதாரம் என்ற குறிக்கோளை எய்தும் நோக்குடன், தேசிய ஊரக சுகாதார நலத் திட்டம் - தமிழ்நாடு சுகாதார நலத் திட்டம் என்னும் இரண்டு மாபெரும் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச்சூழலைக் கொண்ட தரமான மருத்துவச் சேவையை தாராளமாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.  
 
இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் விதமாக, ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்துதல்;
 
உயிர் காக்கும் உபகரணங்களை தமிழ்நாடு சுகாதார நலத் திட்டத்தின் கீழ் 55 கோடி ரூபாய் செலவில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குதல்;
 
உணவு பாதுகாப்பு-மருந்து கட்டுப்பாடு நிருவாகத்திற்கென தனியாக ஒரு ஆணையரகத்தை உருவாக்குவது;
 
திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு சிகிச்சை மையம், அமைத்தல்;
 
மக்கள் வீட்டிற்கே சென்று சுகாதார வசதிகள் அளிக்கக் கூடிய நடமாடும் மருத்துவமனை என்னும் புதிய திட்டம் உட்பட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் எனது தலைமையிலான அரசின், 2011-2012 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் அறிவீர்கள்.  
 
இவை மட்டும் அல்லாமல், அனைவருக்கும் மருத்துவ சேவையை நல்கும் வகையில், முதலமைச்சரின் விரிவான பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
 
இதன் அடிப்படையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  
 
தற்போது, இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும், தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வகையில், பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை, ஒன்றை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  
 
இந்த மருத்துவமனை, சென்னை மாநகரத்தின் மையப்பகுதியான அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய தி.மு.க அரசால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட, 97,829 சதுர மீட்டர் தளப்பரப்பு கொண்ட பிளாக் ‘ஏ’ கட்டடத்தில் அமைக்கப்படும்.
 
இந்தக் கட்டடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தற்போது உள்ள 36 துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதல்ல என்பதாலும்; பயன்படுத்தக்கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால், அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்தக் கட்டடம் இல்லை என்பதாலும்; இரு வேறு கட்டடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும்; சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.  
 
தற்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டடம், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த பல துறை உயர் சிறப்பு மருத்துவ மனையை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்தக் கட்டடத்தில் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் நியமிக் கப்பட்டு, உயர் தர மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு, இந்த மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  
 
இந்த மருத்துவமனை, புதுடெல்லியிலுள்ள எய்ம்ஸ் (ஆல் இந்தியா மெடிக்கல் சயின்ஸ்) மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் விளங்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
 
மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் பிளாக் ‘பி’ கட்டடங்களில் புதியதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்கவும் எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது என்பதையும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
 
தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலக கட்டிடம் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.
 
அவரது அறிவிப்பை இன்று சட்டசபைக்கு வந்து இருந்த அனைத்து கட்சியினரும் வரவேற்றனர்.
 
முதலில் சபாநாயகர் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன் (தே.மு.தி.க.), சவுந்தர்ராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ), ராமச்சந்திரன் (இந்திய கம்யூ), விஜயதாரணி (காங்), கலையரசன் (பா.ம.க.), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார் (ச.ம.க.), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை) ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.
 
புதிய தலைமை செயலகத்தில் மருத்துவமனை- அனைத்து கட்சியினரும் வரவேற்பு

கருத்து

சர்கஸ் கூடாரம் போன்ற அது மருத்துவனை ஆக செயல்படுவதே நல்லது. இது போன்ற கேவலமான ஒரு கட்டிடத்தை இவ்வளவு பொருள் செலவில் கட்டியதாக வரலாறு இல்லை.ஆயிரம் வரும் முன் கட்டிய தஞ்சை கோயில் கண்ணுக்கு விருந்தளிகிறது. இவர்கள் கட்டியதை பார்த்தால் கண்ணுக்கு வழிதான். தமிழனுக்கு கட்டிடகலை மறந்ததா அல்லது கட்டிட கலையை பற்றி ஒன்றும் அறியாதவர்கள் செய்த வேலையா என தெரியவில்லை. எல்லாம் அந்த திஹார் முன்னேற்ற கழக தலைவருக்குத்தான் வெளிச்சம். -Vel.
 
பரவயில்லை நல்ல ஐடியா. பொதுமக்கள் பணம் பொதுமக்களுக்காக பயன்படுத்தபடுகிறது.அம்மாண்டா அம்மாதான். கீப் இட் அம்மு.
 
சிறைச்சலையாய் இக்கட்டிடத்தை மாற்றி அமைத்தால் தி மு க வினரை கூண்டோடு பிடித்து அடைக்க வசதியாய் இருக்குமே ! ரெங்கநாதன்,கொல்கத்தா
 
புதிய கட்டிடத்தில் சட்டமன்றம் நடக்கப்போவதில்லை என்றுஇங்கு கருத்து எழுதும் எல்லோருக்கும் தெரியும். அது எப்போதோ உறுதியாகிவிட்டது. ஆகமொத்தம் வேறு எதற்கோ பயன்படுத்த போகிறார்கள் என்பதும் உறுதியாகிவிட்டது. குறை சொல்லுமாறு ஏதாவது ஒன்றுக்கு பயன்படுத்த போகிறார்கள் என்று நினைத்தவர்களுக்கு மருத்துவமனை என்று அறிவித்ததுமே குறைகூற வழியில்லையே அரசியல் ஆதாயம் தேடமுடியாதே என்ற வயிற்ற்றேரிச்ச்சலில் எதையோ புலம்பிதள்ளுகிறார்கள். புலம்புபவர்கள்புலம்பட்டும். மருத்துவமனை போன்ற உயரிய விஷயங்கள் அரங்கேறுவதற்கு வாழ்த்துக்கள். சட்டமன்றத்தை விட மருத்துவமனை எவ்வளவோ மேல். ஆனால் அதில் முறைகேடு நடந்தது உண்மை. -அலேக்
 
அந்த கட்டிடத்திற்கு 1000 கோடி செலவாயிற்று என்று சொல்லி ஒருவர் கொள்ளை அடித்தாரே.. அதில் 1000 கோடிக்கு என்ன செலவு செய்தார்..
 
கருணாநிதி தான் திரும்பவும் ஆட்சிக்கு வந்து விடுவோம் இந்த புதிய சட்டமன்றத்தில் எல்லோரும் வழக்கம் போல புகழ்வார்கள் என்று எண்ணியிருந்தார். மக்கள் சம்மட்டி அடி கொடுத்தார்கள். புகழுக்கு மயங்கும் தகுதியில்லாத ஒருவரை புகழ்வதற்கும் இந்த அரசியல்வாதிகளின் வெட்டிப்பேச்சுக்கும் பலனடைவதை விட ஒரு உயரிய நோக்கத்துக்கு பலனளிக்க போவது சிறந்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வரவேற்க வேண்டும். இலங்கை தமிழருக்கு மாதமாதம் 1000 ரூபாய் அறிவித்திருப்பதே கருணாநிதிக்கு பொறுக்கவில்லை. மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என்று கோரியவர் தானே.-தயாளன்
 
 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...