Saturday, August 27, 2011

இந்திராவின் பாட்டன் - முப்பாட்டன் சொத்தல்ல, கச்சத்தீவு! சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் சிங்களரிடம் தமிழ் மீனவர்கள் அனுபவிக்கும் சித்தரவதைகள்

 


சிங்களக் கடற்படையினர் தம்மிடம் சிக்கிக் கொள்ளும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது மேற்கொள்ளும் சித்திரவதைக் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

. நமது சொந்தங்களை நிர்வாணமாக்குவது.

. கைகளை உயர்த்தி நின்றபோதும், கருணையே இல்லாமல் அப்பாவி மீனவர்களைக் காக்கைக் குருவிகளைச் சுடுவதுபோலச் சுட்டுத் தள்ளுவது.

. ஐஸ் கட்டி மீது படுக்க வைப்பது.

. ஐஸ் கட்டியைத் தலைமீது சுமக்க வைப்பது.

. கல் உப்பு மீது முழங்காலிட்டு முட்டி போட வைப்பது.

. கிரீஸ் ஆயிலுடன் மசால் பொடியைக் கலந்து உண்ணச் சொல்வது.

. இறந்த திருக்கை மீனுடன் உடலுறவு கொள்ளச் செய்வது.

. தந்தை, மகன், அண்ணன், தம்பி என்ற உறவுகளைப் பாராமல் ஒருபால் இனச்சேர்க்கை செய்ய வைப்பது.

. முகத்தில் காறி உமிழ்வது.

௧0. சிறு நீரை அருந்தச் செய்வது.

௧௧. இந்திய வேசி மக்களே எனவும், கோழைத் தமிழர்களே எனவும் வசைமாரி பொழிவது.

௧௨. உடல் ஊனமுற்ற மீனவர்களைக் கடலுக்குள் தள்ளி விடுவது.

௧௩. பிடித்து வைத்த மீன்களை அள்ளிச் செல்வது.

௧௪. பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வலைகளை அறுத்தெறிவது.

௧௫. மீனவர்களுக்குச் சொந்தமான தங்க மோதிரம், சங்கிலி, அலைபேசி,, கைப்பணத்தைப் பறித்துக் கொள்வது.

௧௬. அமில பாட்டிலைக் காட்டி மிரட்டுவது.

௧௭. பூட்ஸ் காலால் ஏறி மிதிப்பது.

௧௮. துப்பாக்கியைத் திருப்பி, அடிக்கட்டையால், மீனவர்களைத் தாக்குவது.

௧௯. கடலில் மூழ்கடிப்பது.

௨0. மீனவர்களைக் கைது செய்துகொண்டுபோய் இலங்கைச் சிறையில் அடைப்பது; சித்திரவதை செய்வது.

சஙக காலந்தொட்டு கச்சத் தீவு இந்தியாவிற்குத்தான் சொந்தம் என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. பண்டாரநாயகா-நேருவின் குடும்ப உறவின் தொடர்ச்சியாக, திருமதி இந்திராகாந்தி-திருமதி பண்டாரநாயகாவிற்குக் கச்சத் தீவைப் பரிசாகத் தந்திட, கச்சத் தீவு, இந்திராவின் பாட்டன் முப்பாட்டன் சொத்தல்ல. தமிழகத்தின் சொத்து.

எனவே, நம் சகோதரச் சொந்தங்களான தமிழக மீனவர்கள், சிங்களக் கடற்படையினரால் அனுபவிக்கும் இன்னல்களுக்கு முடிவு கட்டிட கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதொன்றுதான் சரியான வழி. இதுவே தனி ஈழம் அமைத்திட முதற்படியாகவும் இருக்கும்.


தகவல் உதவி: கச்சத் தீவு மீட்பு இயக்கம்-9884227293

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...