Tuesday, August 30, 2011

கை கொடுத்த ஜெயாவும், கலைஞரின் சிறுபிள்ளைத்தனமும்


கலைஞரின் சிறுபிள்ளைத்தனமான பேச்சு.........

நேற்று கலைஞர் ஒரு அறிக்கை விட்டிருந்தார்.
அதில் ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால் பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகிய மூவரையும் மன்னித்து அவர்களை தூக்கிலிருந்து காப்பாற்றியிருப்பார் என்று சொல்லியிருந்தார். அதை படித்ததும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ராஜீவை கொன்றதால் தானே இந்த வழக்கு நடைபெறுகிறது. ராஜீவ் கொலை சதியில் மூவருக்கும் பங்கிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுத்தானே தூக்குத்தண்டனையை எதிர் நோக்கியுள்ளார்கள். அப்புறம் எப்படி இப்படி பேசுகிறார் கலைஞர்?. அடப்போங்க தலைவரே....ராஜீவ் உயிரோடு இருந்தால் இந்த வழக்கிற்க்கே வேலையில்லை.தூக்குக்கும் வேலையில்லை....



பாவம் செங்கொடி....

மூன்று உயிர்களை காப்பாற்ற தன் உயிரை இழந்துள்ளார் செங்கொடி.இப்படி தற்கொலை செய்துகொள்வதால் ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை,உயிர் போவதை தவிர.... எதற்கெடுத்தாலும் இப்படி உணர்சிவசப்பட்டு தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. தற்கொலை செய்து கொண்டால் அந்த ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோ தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு வேதனை, வலி எல்லாம். உயிர் பிரிந்துவிட்டால் எல்லாம் முடிந்துவிடும். ஆனால், தற்கொலை செய்து கொண்டவர்களின் பெற்றோருக்கோ, குடும்பத்திற்கோ அது ஆயுள் முழுவதும் வலியும், வேதனையும். 
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் எல்லாம் பெரும்பாலும் திட்டம் போட்டு வருவதில்லை. அந்த கன நிமிட யோசனைதான். இன்னும் கொஞ்ச நேரம் யோசித்தால் அது எத்தனைபெரிய முட்டாள்தனம் என்பது புரியும். துணிச்சலில் மிகப்பெரிய துணிச்சல் சாவை நேருக்கு நேர் சந்திப்பதுதான். அப்படி சாவை சந்திக்கும் துணிச்சலில் பாதியளவை  போராடவோ, வாழ்வதற்க்கோ பயன்படுத்தினாலே போதும் வெற்றியடைந்து விடலாம்.
செங்கொடியின் தியாகத்தை நான் கொச்சைப்படுத்தவில்லை.அதே நேரம், இந்த உயிர்தியாகத்தை தற்கொலையை தலையில் தூக்கிவைத்து கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படி கொண்டாடினால், அது தற்கொலை செய்து கொள்ளும் உத்வேகத்தை மற்றவர்களுக்கும் கொடுத்து விடும் அபாயம் இருக்கிறது ஜாக்கிரதை. அந்த மூன்று உயிர்களுக்காக போன முதல் உயிரும், கடைசி உயிரும் செங்கொடியின் உயிராக மட்டும் இருக்கட்டும்.


  நேற்று கைவிட்டு இன்று கை கொடுத்த ஜெயா...

மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் எனக்கில்லை என்று  நேற்று கைவிரித்து விட்டிருந்தார் ஜெ....ஆனாலும், இன்னும் அவருக்கு அந்த அதிகாரம் இருப்பதாகவே சொல்கிறார்கள் தமிழுணர்வாளர்கள். அரசியல் சட்டவிதி 161, மற்றும் 72 , உட்பிரிவு-3 ஆகியவை ஜனாதிபதி நிராகரித்த கருணை மனுக்களை அமைச்சரவையின் முடிவின்படி மாநில கவர்னர் ஏற்று தூக்குத்தண்டனையை நீக்குமதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதை உறுதி செய்கிறதாம்.

விதி-72, ஜனாதிபதிக்கு தூக்குத்தண்டனையை நீக்கும் அதிகாரத்தை வழங்கினாலும், அதன் உட்பிரிவு 3, ஜனாதிபதி ஒரு கருனைமனு மீது என்ன முடிவு எடுத்திருந்தாலும், மாநில ஆளுனர் அதை பொருட்படுத்தாமல் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தனித்த முடிவு எடுக்கலாமென்று உரிமை அளித்துள்ளதாம். 


தற்போதைய செய்தி

  தன் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டசபையில் தூக்கை நிறுத்த
இன்று தீர்மானம் போட்டுள்ளார் ஜெ., இப்போது தூக்குத்தண்டனைக்கு 8 வாரகாலம்  தடை விதித்துள்ளது நீதிமன்றம்.
 
 இதையும் படிச்சிடுங்களே....

மூன்று பேருக்கும் தூக்கு -இப்ப சந்தோஷமா சோனியாஜி? ....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...