Monday, May 23, 2016

நம்மையே நாம் ஏமாற்றிவிட முடியுமா? ஒருபோதும் முடியாது!



உண்மையென்று நம்புவதையும், நான் ருசுப்படுத்தப் போவதையும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டாம்! ஊரை ஏமாற்றலாம்; உலகை ஏமாற்றலாம்; ஆனால், நம்மையே நாம் ஏமாற்றிவிட முடியுமா? ஒருபோதும் முடியாது! என்பது போன்ற வரிகளில் போதிக்கும் தத்துவம்.
சீ, சீ இந்த பழம் புளிக்கும் ,எட்டி, எட்டி பறிக்க முயன்று முடியாதலால் திராட்சை பழம் புளித்ததென்று சொன்ன கதை எவருக்கும் பொருந்தும் வாழ்வில் இந்த கதை எது கூடுகின்றதோ, எது கிடைக்கின்றதோ அது உன் வரையில் அமிர்தம் எது தவிர்க்கின்றதோ உன்னை, எது கை கூ டவில்லை யோ, அது விஷம் இந்த மனநிலை கொண்டு விட்டால் அனைவருமே, எந்த கவலையும் தான் அண்டாதே யாரையுமே !!!!!!!!!
கோவில் கட்டுவம் என்று வெளிகிட்டார் ஒரு ஜீவகாரு ண்னியம் எதோ நாட்கள் உரூண்டது , பொய் முகம் எமக்கு தெரிந்தது ! ஆம் அவருக்கு உண்மையில் கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் ஏன் அவர் கோவில் கட்ட வெளிகிட்டார் என்கிறிர்களா? வேறொண்டும் இல்லை தானும் ஏதோ பேர் எடுக்கலாம் என்று தான் வெளிக்கிட்டார். பாவம் அவர் நடவடிக்கைகளை எல்லாரும் புரிந்து கொண்டனர். தமிழ்சங்கத்திட்குள் சென்றார் ஓரளவு வெற்றியும் கண்டார் எண்டு சொல்லலாம் . தனக்கு வேண்டியவர்களை அழைத்து அவர்களுக்கு பொன்னாடையும் போர்த்தி தன் புகழை மேலேடுத்தார் . என்ன அபார திறமை அர சாங்க மூலமாயும் பணம் எடுத்து உலகை வலம் வந்து இதெல்லாம் ஓர் பொழைப்பு !!!!!!!!! ஒரு நாள் ஊரை ஏமாற்றலாம் பல நாள் ஏமாற்ற முடியாது என்ற படிப்பினையை தாமதமாக புரிந்து கொள்ளவேடியிருக்கும். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பது உலக நியதி. அப்படியானால் நாம் ஏன் எப்போதும் ஏமாந்துகொண்டே இருக்கவேண்டும். 
PHD பட்டம் பெற்றவரை வாரிவிட வேண்டும் என்று அது பொய் என்று தெரிந்தும் , அவர் தன்னை எதிர்த்தவர் என்ற காரணத்தினால் அவரை சமுதாயத்தில் வெட்கப் படும்படி செய்தார். அதற்கான காயை இலகுவாக நகர்த்தினார். என்று களம் காலமாக அவரோடு வேலை பார்த்த MR .GAB கூறுகிறார். அதை ஆமோதிக்கிறார் பவர்.
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்
நிம்மதி கொள்வதென்பதேது?
அற்றது உலகில் அமைதியும், மகிழ்வும்,
அரும்பிட முடியாது
என்பது போன்ற வரிகளில் போதிக்கும் தத்துவம்.
உண்மையென்று நம்புவதையும், நான் ருசுப்படுத்தப் போவதையும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டாம்.
அவரவர் அவரவருக்கு உண் மையாக இருந்துவிட்டால் அதை விட, திருட்டு, புரட்டு, ஏமாற்றல், ஏய்த்தல் ஏதாவது சமூகத்தில் இருக்க இடம் உண்டா?
நெஞ்சில் நினைப்பதை செயலில் நாட்டுதல் நீசமன்று மறக்குல மாட்சி யாம் என்றார் புரட்சிக்கவிஞர். உன்னையே நீ உணர்ந்துகொள் என்றார் கிரேக்க அறிஞர் சாக்ரட்டீஸ். அவரவர் அவரது உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதல்தான் அது! நம்மில் பலர் ஊரை ஏமாற்றலாம்; உலகை ஏமாற்றலாம்; ஆனால், நம்மையே நாம் ஏமாற்றிவிட முடியுமா? ஒருபோதும் முடியாது! உள்ளொன்று வைத்துப் புற மொன்று பேசுவோர் உறவு கல வாமை வேண்டும் என்றார் வடலூர் வள்ளலார்!
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்
நிம்மதி கொள்வதென்பதேது?
அற்றது உலகில் அமைதியும், மகிழ்வும்,
அரும்பிட முடியாது
என்பது போன்ற வரிகளில் போதிக்கும் தத்துவம்.
பிறரை வஞ்சிக்கும் எண்ணம் படைத்த எவரும் முதலில் தன்னை வஞ்சித்துத் தாழ்ந்து வீழ்ந்த நிலைக் குப் போகிறான் என்பதைத்தான் கூறாது கூறுகிறார்.நீங்கள் உங்களுக்கு உண்மை யாக இருக்கவேண்டும் என்ற அறிவுரை - கருத்துரைமூலம் இங்கர் சால் கூறுகிறார்.
"கடவுளே, வேல்முருகா ! கந்தா! கடம்பா! இந்த உலகில் மாற்ற வேண்டியவைகளை மாற்றக்கூடிய திறனையும், மாற்ற முடியாதவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடிய மன வலிமையையும், ஏமாற்றுபவர்களையும் அடையாளம் கண்டு கொள்ளும் விவேகத்தையும் எமக்கு அருள்வாயாக".
இன்னொரு தரப்பு சொல்றதையும் கேட்டு, எது உண்மை, எது பொய், நிஜமா என்னதான் நடந்துச்சுன்னு நம்ம யோசிச்சு முடிவு செஞ்சுக்கனும்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...