Thursday, May 19, 2016

தீரமுள்ள தலைவியின் தலைமையில் தொடரட்டும் நல்லாட்சி...!!!



இதுதான் தலைமை...
இதுதான் தீரம்...
இவர்தான் எங்கள் தலைவி...
***நான்கு வருடம் தண்டனை 100 கோடி அபராதம் என கண்மூடித்தனமான தவறான தீர்ப்பு அளிக்கப்பட்டபோது மன உறுதியோடு எதிர்கொள்கிறார் யாரையும் குற்றமோ குறையோ சொல்லாமல்... 
(ஐய்யய்யோ என்கிற கூப்பாடு இல்லை...)
***நீதிபதி கேட்கிறார் நீங்கள் வேண்டுமானால் தமிழகத்திற்க்கு சென்று விட்டு வரலாம் என்று...
அதற்கு எங்கள் அம்மா சொன்ன பதில், உங்கள் கருணைக்கு நன்றி சட்டம் எல்லாருக்கும் சமம்.. நான் எல்லாவற்றுக்கும் தயராக தான் வந்துள்ளேன் சிறைக்கு செல்ல நான் தயார் என்கிறார் இதுதான் தைரியம்...
(இதுதான் சமயமென்று தமிழகம்வந்து அழுது புலம்பவில்லை...)
அப்போது கூட தமிழகத்தை சேர்ந்த எந்த அமைச்சரோ அதிகாரிகளோ இல்லை.., பாராளுமன்ற உறுப்பினர்களோ கர்நாடக முதல்வரை சந்தித்து சிறைச்சாலையில் வசதிகளையோ இல்லை உடனடி ஜாமினுக்கோ கெஞ்சி கூத்தாடி கைகட்டி நிற்க்கவில்லை இதுதான் எங்கள் அம்மா...
(அவங்க விரும்பியிருந்தால் கேட்கும் வசதிகள் கிடைத்திருக்கும்...)
***ஒரே தலைவர் அவர் மட்டும் தான் கட்சிக்கு தலைமை அவர் தான் ஒட்டுமொத்த செயல்பாடுகள் அவர் இல்லை இருந்தும் தமிழகத்தில் அமைதியாக ஆட்சி நடக்கிறது கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது ஒருவன் கூட கட்சி கட்டுப்பாட்டை மீறி நடக்கவில்லை இது தான்டா அம்மா அதிமுக...
(பிரார்த்தனை மட்டுமே செய்தார்கள்...)
கிட்ட தட்ட ஒரு மாதம் சிறை வாசம் முடிந்து வெளி வருகிறார் அவரை காண ஒட்டு மொத்த தமிழகமும் காத்து கிடக்கிறது கொட்டும் மழையிலும்...
(அன்பால் கூடிய கூட்டம்...)
***வெளியே வந்த பிறகு கூட தனக்கு வழங்கப்பட்ட அநீதி தீர்ப்பையோ நீதிபதியையோ எதிர்த்து ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை இப்போது நியாயமான தீர்ப்பு வந்தும் கூட தலையில் வைத்து ஆடவில்லை அமைதியாக ஒரே ஒரு அறிக்கையோடு இருந்து விட்டார் இது தான் அம்மா...
***அவரை மீண்டும் சதி வலையில் சிக்க வைக்க எத்தனை சூழ்ச்சி எத்தனை கலகம் எத்தனை எதிர்கட்சிகள் ஒன்று கூடுகிறார்கள் நீதி வழங்கிய நீதியரசரை திட்டி தீர்த்து விட்டார்கள் தமிழர்களை மதிக்காத கன்னடனின் காலில் கூட விழ்ந்தாகி விட்டது...
இப்போ சொல்லுங்க உங்களுக்கு எங்கள் அம்மாவை பார்த்து பயமேயில்லை என்று...
போங்கய்யா... அரசியலில் ஒரு பெண்ணை எதிர்த்து நிற்கமுடியாமல் வெற்று சவடால் பேச்சு எதற்கு...??? உங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்பது எதற்கு...???
தீரமுள்ள தலைவியின் தலைமையில் தொடரட்டும் நல்லாட்சி...!!!


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...