Sunday, May 22, 2016

மக்களை குறைகூறும் அரசியல் வியாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்...

ஆட்டை கடிச்சி , மாட்டை கடிச்சி கடைசியில் மனுசனை கடிச்ச கதையாகத்தான் இருக்கின்றது இன்றைய அரசியல் வாதிகளின் பேச்சுக்கள்.
மக்கள் எப்போதும் ஒரே போலத்தான் இருக்கின்றார்கள் அனால் அரசியல்வாதிகள் தான் சுயநல வாதிகள்.
தனக்கு வெற்றி கிடைக்க வில்லை எனில் மக்களை குற்றம் சொல்கின்றனர்.
பணம் கொடுத்தது இரண்டு பெரிய கட்சிகளுமே தான் ஆனால் இதில் என்ன சிரிப்பு எனில்.
இருவரும் நேர்மையாக வெற்றி பெற்றோம் என்றும் மார்தட்டி கொள்வது தான்.
நீங்கள் தான் அவர்களை தூண்டினீர்கள் பணம் வாங்கவும், ஓட்டு போடவும்.
அதனால் இன்று அவர்களை குற்றம் சொல்ல தங்களுக்கு அருகதை இல்லை.
மக்களை எப்போது தாங்கள் சிந்திக்க விட்டு இருக்கின்றீர்கள்?
இவர் ஆட்சியில் 50000 கோடி கொள்ளை எண்டால் ,
அவர் ஆட்சியில் 100000 கோடி கொள்ளை நடக்கின்றது.
இதற்குள் தேர்தல் வந்து விடுகின்றது.
மறுபடியும் பழைய பஞ்சாங்கம்.
அவர் இவ்வளவு கொள்ளை , இவர் இவ்வளவு கொள்ளை என்று குற்றம் மேல் குற்றம் சொல்வது.
அதனால் தான் யாருக்குப் போடுவது என்று தெரியாமலே அவன் போட்டு இருக்கான்.
இன்று
உங்கள் இருவரிடம் தான் தமிழ்நாடு இருக்கின்றது.
பார்ப்போம் என்ன நீங்கள் செய்து கிழித்து விடுகிறீர்கள் எண்டு.
வரும் ஐந்து ஆண்டுகளில் அந்தந்த தொகுதி சமஉ எத்தனை முறை வந்து குறை கேட்டு அதில் எத்தனை நிறைவேற்றி வைக்கிறார்கள் என்று?
ஒன்றும் நடக்கப் போவது இல்லை.
ஒன்னும் செய்யாமல் முடிந்த அளவிற்க்கு கொள்ளை அடித்து, மக்கள் வயிற்றில் அடித்து தாங்கள் தங்கள் வயிற்றில் போட்டுக் கொண்டு,
கடைசியில் மக்களையே குறை கூறுவது அவன் காசுக்கு ஓட்டு போட்டுட்டான் எண்டு.
இன்று எங்களை திட்டும் கட்சிகளே! எங்களால் வெற்றி பெற்று , எங்கள் வளங்களைத் திருடி , எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கின்றீர்களே ! உங்களை என்ன சொல்லி திட்ட?
திட்ட வேண்டுமெனில் அதற்கு கேவலமான வார்த்தைகள் எம் தாய் மொழியில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
முதலில் தலைவன் , தன் கீழ் உள்ள மாவட்ட நிர்வாகிகளை திருத்தட்டும், நிர்வாகிகள் அவர்களின் கீழ் உள்ளவர்களைத் திருத்தட்டும், உங்கம் முதுகில் உள்ள அழுக்கை அகற்றுங்கள்.
பிறகு எமது முகத்தில் உள்ள அழுக்கை நாம் அகற்றுவோம்.
எமது மக்களையும், எம்மையும் திட்ட உங்களுக்கு (அரசியல் வியாதிகள்) எந்த அறுகதையும் இல்லை.
அதற்கு தாங்கள் தகுதியானவர்களும் இல்லை.
மக்கள் நலன் , மக்கள் நலன் எண்டு கூவி கூவி விற்கும் கட்சிகளே!
அந்த மக்கள் நலனுக்காக நீங்கள் ஒன்று சேர முடியுமா?
மக்களுக்காக எதையும் செய்யத் தயார் எண்டு சொல்லும் நீங்கள் ஏன் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல ஆட்சியை கொடுக்க முடியாது?
அது உங்களால் முடியாது ஏனெனில் தாங்கள் அரசியல் நடத்தவில்லை.
வியாபாரம்(விபச்சாரம்) நடத்தி வருகிறீர்கள்.
தன்னையும், தன் குடும்பத்தையும், தன் தாயையும் திட்டுகின்றோம் என்று கூட தெரியாமல் சில அருவடிகள் .
மீம்ஸ் உருவாக்குகின்றார்கள்.
முதலில் உருப்படும் வேலையைப் பாருங்க.
அப்புறம் அதனெல்லாம் உருவாக்கலாம்.
தலைவனுக்காக உயிரையும் கொடுப்போம் என்று மார்தட்டி கொள்பவனில் பலர் தன் பெற்றோர்க்கு தண்ணிகூட கொடுத்து இருக்காதவன் தான்.
எம்மையும், எமது மக்களையும் திட்டும் அறுகதை எந்த அரசியல் வியாதிகளுக்கும் இல்லை.
முடிந்தால்
நேர்மையுடன் இருந்து மக்களிடன் நன் மதிப்பை பெறுங்கள், பிறகு அவர்களுக்கு அறியாமையைப் போக்குங்கள் . அதன் பிறகு நீங்கள் சொல்ல வேண்டாம். நாங்களே உங்களை தேர்ந்தெடுப்போம்.
வாழ்க தமிழ்!
வளர்க தமிழன்!!


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...