Wednesday, October 8, 2014

வியாபாரம் ஒன்றே ஊடகங்களின் குறிக்கோள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவ்ர்கள் சிறை சென்ற செய்தியே பல ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது.

சிறையில் யாரையும் ஜெயா சந்திக்கவில்லை என்பது பல ஊடகங்களின் செய்தி. கர்நாடக காவல்துறையும் அதனையே சொல்கிறது.
இந்நிலையில் நக்கீரன் தன் இதழ் தலைப்பு செய்தியாக எழுதியுள்ளது:
'அப்பாவையும் மகனையும் உடனே கைது செய்ய ஜெயா உத்தரவு'.
அதாவது கருணாவையும் அவரது மகன் ஸ்டாலினையும் கைது செய்ய ஜெயா உத்தரவாம்.


யாருக்கு உத்தரவு கொடுத்தார்? 
எப்போது கொடுத்தார்? 
எங்கே வைத்து கொடுத்தார்? 
என எந்த தகவலும் நக்கீரன் சொல்லவில்லை.

அப்புறம் எதுக்கு இதுபோன்ற செய்தியை வெளியிட வேண்டும்?
திமுகவினரை ஆத்திரமடைய செய்வது தவிர இந்த செய்தியின் நோக்கம் வேறு எதுவாகவும் இருக்க வாய்ப்பில்லை.
நக்கீரனுக்கு இது போன்ற செய்திகள் புதிதல்ல.

அடுத்து சன் செய்திகள் சேனலுக்கு வருவோம்.

நேற்று சன் செய்திகள் சேனங்லில் ஃப்ளாஷ் ந்யூஸ் மற்றும் அதை ஒட்டிய விவாதத்தின் தலைப்பு:
"பெங்களூரில் தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையா?
தமிழகத்தில் கன்னடர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையா? "

எவனோ ஒரு அதிமுக அடிமை கன்னடர்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளான்.
இருமாநில காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து, அது போன்ற போஸ்டர்களை அகற்றிவிட்டனர்.

இங்கு வாழும் கன்னடன் அவன் பிழைப்பைப் பார்க்கிறான்.
அங்கு வாழும் தமிழன் அவன் பிழைப்பைப் பார்க்கிறான்.

ஆனால் நடுவே சில அரசியல் பொறுக்கிகள் தேவையற்ற சர்ச்சைகளை உண்டாக்குகிறார்கள்.

பொறுப்புடன் செயல்பட மீடியாக்கள் பொறுப்பற்ற முறையில் பரபரப்பூட்டும் செய்திகளை வெளியிடுகிறார்கள்.
தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று யாராக்சும் சன் செய்திகளிடம் வந்து முறையிட்டானா?
சன் செய்திகள் ஃப்ளாஷ் செய்தியின் நோக்கம் என்ன? 
அதிமுகவினரை வன்முறையாளர்களாக காட்டி தான் அரசியல் லாபத்தைப் பார்ப்பது. 

ஊடகங்களே,

தங்களின் வியாபார லாப வெறிக்கு, அரசியல்


வெறிக்கு தயவுசெய்து சமூகத்தில் குழப்பம் 

விளைவிக்காதீர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...