Friday, October 31, 2014

ராஜீவ் குடும்பத்தின் பத்தாயிரம் கோடி சொத்து இன்று யாரிடம் இருக்கிறது ? கேட்பது சு.சுவாமி….!!

திருவாளர் சுப்ரமணியன் சுவாமி எத்தகைய நம்பகத்தன்மை உடையவர் என்பதை புரிந்துகொள்ள உதவும் பேட்டி ஒன்று  இங்கே …..
19/03/2008 அன்று ராஜீவ்-சோனியா தம்பதியின் மகள்
திருமதி பிரியங்கா வாத்ரா வெளியுலகம் அறியாமல்,
ரகசியமாக வேலூர் வந்து அங்கே சிறைப்பட்டிருந்த
திருமதி நளினியை சந்தித்திருக்கிறார்.
சந்திப்பு ரகசியமாக நிகழ்ந்தாலும், பிற்பாடு எப்படியோ
(நளினியின் வழக்குரைஞர் மூலமாக ….? ) விஷயம்
வெளிவந்து விடுகிறது.
இந்த சந்திப்பைப் பற்றி கேள்விப்பட்டு கொதிக்கிறார் சு.சுவாமி. சு.சுவாமி ஏன் கொதிக்க வேண்டும்…..?
அவர் செய்தியாளருக்கு கொடுத்த பேட்டியைப் பார்த்தால்
ஓரளவு புரியலாம்.
திருவாளர் சுப்ரமணியன் சுவாமி சொல்வதிலிருந்து -
‘ரீல்’ எது – ‘ரியல்’ எது என்று பிரித்தறிவதற்கு 
தனி சாமர்த்தியம் வேண்டும்…. பேட்டியைப் படிக்கும்போது, உங்கள் திறமையை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள் ..!
பேட்டிக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் -
( இந்த பேட்டி வெளியானது – ஏப்ரல் 2008 -ல் )
————————
Dr.swamy and  mrs.gandhi
-( நண்பரா ..? பகைவரா….? )-
பிரியங்கா-நளினி சந்திப்பு விவகாரத்தை அரசியல் புயல்
கிளப்பும் ஆயுதமாகக் கையில் எடுத்திருக்கிறார், ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி.
‘ ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை 
விதிக்கப்பட்டிருக்கும் கைதி நளினியை, சிறை ஆவணங்களில் கூட தன்னுடைய பெயரைப் பதிவு செய்யாமல், பிரியங்கா ஏன் வேறொருவர் பெயரில் சந்திக்க வேண்டும்?
சட்டவிரோதமான இந்தக் காரியத்தை சிறைத்துறை எப்படி அனுமதித்தது? ‘ -
என்றெல்லாம் கேள்விகளை அடுக்கி, தமிழகத் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பி இருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி. (அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது -திமுக.
கலைஞர் கருணாநிதி தான் முதலமைச்சர் ….)
மேலும், ‘தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம்
அதிகமாகி விட்டது. அவர்களோடு தொடர்புடையவர்களுடன் சோனியா காந்தி குடும்பம் நெருக்கமாக இருக்கிறது.  இங்கே ஆளும் தி.மு.க. அரசும் அதற்கு துணை போகிறது.
எனவே, தமிழக அரசை உடனடியாகக் கலைக்க வேண்டும்………..!!!
நளினி-பிரியங்கா சிறை சந்திப்புத் தொடர்பாக நான் கேட்டிருக்கும்  விவரங்களை தலைமைச் செயலாளர் திரிபாதி தரவில்லை யென்றால், நிச்சயம் நான் தமிழக அரசு மீது வழக்குப்  போடுவேன்…’ என்கிறார் சுப்ரமணியன் சுவாமி.
‘தன் அப்பாவைக் கொன்றது ஏன்?’ என்ற தகவலைக் கேட்டு அறிவதற்காக மட்டும் பிரியங்கா நளினியைப் பார்க்கவில்லை!  ராஜீவ் இறந்து பதினேழு வருடங்களுக்குப் பிறகு இது என்ன திடீர் அக்கறை?
நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிவரும் விஷயம், 
‘ராஜீவ் கொலை பற்றிய நிஜமான மர்மங்கள் சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியும்’ என்பதுதான்.
எனக்குக் கிடைத்திருக்கும் உறுதியான தகவல்களைச்
சொல்கிறேன் -
தன் சிறை அனுபவங்கள் குறித்து நளினியின் கணவர் முருகன் ஒரு புத்தகம் எழுதி வருகிறாராம். அதில், ராஜீவ் காந்தி கொலையில் சோனியா காந்தியின் அம்மாவான பவுலா மெய்னோவுக்கு ஏதோ தொடர்பு இருப்பதாக தெளிவாக எழுதி இருக்கிறாராம். இதெல்லாம் சோனியாவுக்குத் தெரியவர…  பதறிப்போய் தன்னுடைய மகளை சமாதானத் தூதுவராக வேலூர் அனுப்பி இருக்கிறார். இதுதான் உறுதியான உண்மை!”
”ரொம்ப அதிரடியாகச் சொல்கிறீர்களே… இதற்கெல்லாம் என்ன ஆதாரம்?”
”நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவரும் இந்தக் 
குற்றச்சாட்டுக்களை இதுநாள் வரையில் சோனியா 
குடும்பத்தினர் மறுக்கவில்லையே? அவருடைய அம்மா  பவுலா மெய்னோ, பாரீஸில் இருக்கும் ஒரு ஹோட்டலில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த மறைந்த ஆன்டன் பாலசிங்கத்தை சந்தித்துப் பேசியதுண்டு.
சோனியா குடும்பத்துக்கு நெருக்கமான குவாத்ரோச்சி,
விடுதலைப் புலிகளுக்கும் ஆயுத சப்ளை செய்து
கொண்டிருந்தவர்தான். சோனியா காந்தியின் அப்பா
ஸ்டெஃபினோ மெய்னோ, ஹிட்லரின் படையில் சிப்பாயாக இருந்தவர். பிற்பாடு ரஷ்ய உளவுப்படைக்கு ஏஜென்டாக இருந்தவர். இந்தக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நான்கு ஆண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டவர்.
இப்படியெல்லாம் குடும்ப வரலாற்றுப் பின்னணி சோனியா காந்திக்கு உள்ளது. ஆரம்பத்தில் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்கும் இவர்களுக்கும் ஏற்பட்ட புரிந்துகொள்ளலின்படி இப்போது இவர்களால் நடந்துகொள்ள முடியவில்லை. அதை மீறி விட்டார்கள்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிடும் இலங்கை
அரசாங்கத்துக்கு இந்தியா எல்லா உதவிகளும் செய்கிறது.
இதனால், புலிகள் நசுக்கப்படுகிறார்கள்.
‘வாக்குறுதிகள் மீறப்படுகின்றன’ என்பதை சோனியா தரப்புக்கு உணர்த்துவதற்காகத்தான், நளினி மூலமாக சில காய்களை புலிகள் நகர்த்தியிருக்கிறார்கள். அதன் விளைவுதான் புலிகளோடு சமாதானம் பேசுவதற்காக நளினியை சந்திக்கப் பிரியங்காவை அனுப்பி இருக்கிறார் என்கிறேன் நான்!”
”நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்?”
”இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை?! ராஜீவ் உயிரோடு இருந்தால், சோனியா அரசியலுக்கு வந்திருக்க முடியுமா?
ராஜீவ் குடும்பத்தின் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இன்றைக்கு யாரிடம் இருக்கிறது? 
கூட்டிக் கழித்துப் பாருங்கள், புரியும்.
அதுமட்டுமல்ல, ‘ராஜீவ் காந்தி ஃபவுன்டேஷன்’ என்ற பெயரில் நூற்றுக்கணக்கான கோடிகளை வசூலித்து டிரஸ்ட் போன்று  அமைத்திருக்கிறார் சோனியா. ராஜீவ் கொலையானபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உயிரைவிட்ட போலீஸ்காரர்கள், காங்கிரஸ்காரர்கள், பொதுமக்கள் ஆகியோரின் குடும்பத்துக்குத்தானே இந்த ஃபவுன்டேஷன் உதவ வேண்டும்?
ஆனால், ராஜீவைக் கொன்ற கொலையாளிகளான நளினியும் முருகனும் படிப்பதற்கல்லவா இந்த ஃபவுன்டேஷன் ஸ்காலர்ஷிப் கொடுக்கிறது!
”நளியின் வழக்கறிஞருக்கு இந்த சந்திப்பு எப்போது தெரிந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?”
”துரைசாமி, நளினியின் வழக்கறிஞர் மட்டுமல்ல.
விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் திராவிடர் கழகப் பிரமுகர்.  அவர், எதுவுமே தெரியாதது போல தனது தரப்பு ஆட்களை விட்டுத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  பிரியங்கா-நளினியை சந்தித்து விட்டுச் சென்ற விவகாரத்தை சிறைத்துறை அதிகாரிகளிடமிருந்து புதுசாகக் கேட்பதுபோல் கேட்கிறார். ரகசியமாக நடந்த சந்திப்பை இதன் மூலம் உலகறிய வெளிப்படுத்துகிறார். அப்படியென்றால், பின்னணியில் மிகப் பெரிய நாடகம் நடந்து கொண்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்?
அவரைவிடுங்கள்… தமிழ்நாடு காங்கிரஸார் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்? ராஜீவ் கொலை பற்றி விசாரணை நடத்திய வர்மா கமிஷன், ‘ராஜீவ் இறப்பதற்கு முன்னால் காங்கிரஸ்காரர்கள் அவருடைய பாதுகாப்பைக் குலைப்பதில் நடந்த விவகாரங்களைக் குறித்து நிறைய விசாரிக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறது. அதுபற்றி என்றைக்காவது சோனியா யோசித்தாரா?
ஆனால், வர்மா கமிஷன் ஃபைல்களைத் தொலைத்ததில் பொறுப்பு உள்ள ப.சிதம்பரத்துக்கு நிதியமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறார். புலிகளுக்கு இரங்கற்பா பாடும் தி.மு.க-வோடு கூட்டணி ஏற்படுத்திக்கொள்கிறார்.”

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...