Sunday, October 12, 2014

விஜய் டிவியின் “மகா கேவலமான நிகழ்ச்சி”





தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் மிகச்சிறந்த நிகழ்ச்சிகளோடு, மிகமிகக் கேவலமான நிகழ்ச்சிகளையும் தருவது விஜய் தொலைக்காட்சிதான் என்று நினைக்கிறேன். ஒரே நேரத்தில் எப்படி இப்படி?
நீயா-நானா, மகாபாரதம் போலும் நல்ல சில நிகழ்ச்சிகளை நடத்திவரும் விஜய் டிவியில் இப்போது (அக்டோபர்-2014) ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர்-4 கிட்டத்தட்டக் கேவலத்தின் உச்சத்தை நோக்கிப் போய்விட்டதைக் கேட்பாரில்லையா?
அப்பாவும் மகளும் காதல்பாட்டுடன் நடனமாடும் காட்சி!?!
வேறு எந்த்த் தொலைக்காட்சியிலாவது கண்டதுண்டா?
யாராவது பொதுநல வழக்குப்போட மாட்டார்களா?
நல்ல நிகழ்ச்சி, குழந்தைகளின் இசைத்திறனை உலகறியச் செய்யும் உற்சாக நிகழ்ச்சி என்று பேரெடுத்துவிட்ட “சூப்பர் சிங்கர்-4“ இப்போது கேவலத்தின் உச்சத்தை நோக்கிப் போய்விட்டது.
இதைப்பார்த்தவர்கள் நிச்சயம் கோவப்பட்டிருப்பீர்கள். 

பார்க்காதவர் பார்க்க –
https://www.youtube.com/watch?v=5XpB2lTidjo 

ஜர்த்திகா ஜூட் என்னும் (14வயது?) பெண்ணும் இவரது தந்தையும் வெளிநாட்டிலிருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே வந்தார்களாம்.
நல்லா வந்தாங்கப்பா...
அவுங்களக் குத்தம் சொல்றதா?
ஆடவுட்ட விஜய் தொலைக்காட்சியைச் சொல்றதா?
----------------------------------
ஆனால், பிறகு 10-10-14அன்று ஒளிபரப்பான பின்வரும் நிகழ்ச்சியைப் பார்த்துப் பிரமித்துப் போனதும் உண்மை.
சீனியர் யாழினி மற்றும் ஜூனியர் அரிப்ரியா பங்குபெறும்
(வஞ்சிக்கோட்டை வாலிபன் படப் போட்டிநடனப் பாடல்)

https://www.youtube.com/watch?v=dh91Zbxx9qg  

நாட்டியத்தில் புகழ்பெற்ற பத்மினியும் வைஜயந்தி மாலாவும் பாடிக்கொண்டே ஆடவில்லை, இந்தக் குழந்தைகள் -மூச்சிறைக்காமல் இருப்பதற்காக- நடனத்தை அளவோடு ஆடிக்கொண்டே அற்புதமாகப் பாடியதை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். குழந்தைகளின் திறமையை வெளிக்கொண்டுவர நினைப்பவர்கள் இப்படித்தான் யோசிக்க வேண்டும் அதற்காக அப்பனையும் மகளையும் ஆடவிடுவது கேவலமில்லை?

சரி...
இப்ப, விஜய் டிவியைப் பாராட்டுவதா? திட்டுவதா?

“கேவலம்“ எனும் தமிழ்ச்சொல்லுக்குப் பழந்தமிழில் –
“மிகச் சிறப்பு“ என்று பொருள் 
(சந்தேகப் பிராணிகள் அகரமுதலி காண்க)
இன்றைய தமிழில் “மிக மோசமான” என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆக,
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி
விஜய் டிவியின் “மகா கேவலமான நிகழ்ச்சிஎன்று 
இரண்டு பொருள்பட- “பாராட்டுவது” தான் சரி. 
ன்ன சரிதானுங்களே?!?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...