Thursday, October 16, 2014

A.T.M.இல் பணம் எடுப்பவரா நீங்கள்? – புதிய‌ நடைமுறைகளும்! சமாளிக்கும் வழிகளும்!

ஏ.டிஎம்.இல் பணம் எடுப்பவரா நீங்கள்? – அதன் புதிய‌ நடைமுறை களும்! சமாளிக்கும் வழிகளும்! இதோ உங்களுக்காக‌
இனி ஏடிஎம் கார்டுமூலம் தினமு ம்  100 ரூபாய் எல்லாம் நீங்கள் எடுக்க முடியாது. அப்படி எடுத்தா ல், எக்கச் சக்கமான பணத்தைப் பயன்பாட்டுக் கட்டணமாக கட்ட வேண்டியிருக்கும். வருகிற நவம் பர் 1-ம் தேதியிலிருந்து இந்தப் புதிய விதிமுறையை அமல்படுத்த வங்கிகளுக்கு மத்திய
ரிசர்வ் வங்கி ஒப்புதல் தந்து விட்டது.
ஏடிஎம் இயந்திரம் அறிமுகப்படு த்தப்பட்டதன் நோக்கமே, வங்கி க்குப் போய் வரிசையில் நின்று பணம் எடுப்பதைத்தவிர்க்கவும், அதிகப்பணத்தைப் பாதுகாப்பா க வங்கியில் சேமித்து வைக்க வும்தான். ஆனால், இன்று அந்த ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படு த்துவதைக் குறைக்க ஆர்பிஐ புதிய விதி முறைகளைக் கொண்டு வந்திருப்பது வேடிக்கைதான். ஏடிஎம்மைப் பயன்படு த்துவதில் புதிதாக கொண்டு வரப்பட்டிரு க்கும் நடைமுறைகள் என்னென்ன என் று முதலில் பார்த்துவிடுவோம்.
1.சேமிப்புக்கணக்கு வைத்திருக்கும் ஒரு வர்தான் கணக்கு வைத்திருக்கும் வங்கி யில் ஒரு மாதத்துக்கு ஐந்து முறை எந்த விதக் கட்டணமும் இல்லாமல் பணம் எடுக்கலாம். அதற்குப்பின் வங்கிகள் தே வைப்பட்டால் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கலாம்.
2. வங்கிக் கணக்கு அல்லாத மற்ற வங்கிகளில் பயன்படுத்த ஐந்து வாய்ப்புகள்தான். அதுவும் மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து முறையும், சென்னை, கொ ல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு மெட்ரோ நகரங்க ளில் உள்ள ஏ டிஎம்களில் மூன்று முறையும் பய ன்படுத்தலாம். அதற்குமேல் செய்யும் பரிமாற்ற ங்களுக்குப் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக் கப்படும்.
3. இதற்கான கட்டணமாக 20 ரூபாய் வரையும், அதோடு வேறு ஏதாவது சேவைக்கட்டணம் இ ருந்தால் அதனையும் வங்கிகள் வசூலித்துக் கொள்ளலாம்.
ஆர்பிஐயின் இந்தப் புதிய நெறிமுறை கள் மக்களை பெரிய அளவி ல் பாதிக்கும் என்பதில் எந்த சந்தேக மும் இல்லை. இன்று சம்பாதிக்கும் அனைவருமே பணத்தை மொத்தமா கக் கையில் வைத்துக் கொண்டு செ லவழிப்பதில்லை. சராசரியாக இந்தி யாவில் வங்கிக் கணக்கு வைத்திருக் கும் ஒருவர் மாதத்துக்கு ஏடிஎம்மில் 10 – 12 முறை பரிவர்த்தனை செய்கி றாராம். தமிழகத்தில் தேசிய சராசரி யைவிட பயன்பாட்டு விகிதம் சற்று அதிகமாகவே உள்ளது.
அதிலும் மற்ற வங்கி ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்துவது என்ப து மொத்த பயன்பாட்டில் 35–40% என்ற அளவில் இருந்தாலும், கணக்கு வைத் திருக்கும் வங்கியில் ஒரு மாதத்துக்கா ன பயன்பாடு என்பது குறைந்தபட்சம் 8–10 என்ற அளவிலும் உள்ளது. வாடிக் கையாளர்களுக்கு ஏடிஎம் சேவை தரு வதற்காக எக்கச்சக்கமாக செலவு செய் ய வேண்டியிருப்பதால் பயன்பாட்டுக் கட்டணத்தை விதிக்க வேண்டும் என வங்கிகள் ஆர்பிஐயிடம் கோரிக்கை வைத்ததால், இப்போது இந்தப்புதிய விதிமுறைகளைக்கொண்டு வந்திருக்கிறது ஆர்பிஐ.
ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏடிஎம் இயந்திரங்கள் நாடு முழுக்க துவங்கப்பட்டதற்கு கார ணமே பணம் எடுப்பதற்காக எல் லோரும் வங்கியைத் தேடி வர வேண்டியதில்லை. காரணம், வ ங்கியில் ஊழியர்கள் எண்ணிக் கை போதிய அளவில் இல்லை. இதனால் வாடிக்கையாளர்களி ன் நேரம் வீணாகிறது என்கிற மா திரியான பல காரணங்களினால் தான்.
கடந்த காலங்களில் வங்கி ஊழியர் களின் எண்ணிக்கையை கணி சமாக உயர்த்துவதற்கு எந்த நடவடி க்கையும் எடுக்காத வங்கிகள் ஏ டி எம் இயந்திரங்களின் எண்ணிக்கை யை மட்டும் போட்டி போட்டுக் கொ ண்டு உயர்த்தியது. வங்கிக்கே வரா தீர்கள். உங்களின் எல்லா வேலைக ளையும் ஏடிஎம் இயந்திரம் மூலமே செய்து கொள்ளுங்கள் என்று எல் லா வங்கிகளும்சொன்னது. கேட்காமலே ஏடிஎம் கார்டு தந்துவிட் டு, புதிய தொழில்நுட்பத்துக்குப் பழக்கப்படுத்திய பின், இப்போது திடீரென ஐந்து முறைக்குமேல் எடு த்தால் கட்டணம் என்று சொல்வது வாடிக்கை யாளர்களுக்கு பெரும் பாதிப்பையே ஏற் படுத்தும்.
சரி இனிவங்கிக்கே நேரடியாகச் சென்று பணத்தை எடுக்கலாம் எனில், அங்கும் நீங்கள் பணத்தைச் செலவழிக்கத் தான் வேண்டும். வ ங்கியில் சேமிப்புக் கணக்கு வைத் திருக்க, அதைப் பராமரிக்க என ஆண்டுக்கு 60 ரூபாய் தொடங்கி 500 ரூபாய் வரை செல்கிறது. சில தனியார் வங்கிகள் 1,000 ரூபாய் கூட வசூலிக்கின்றன. (சில தனி யார் வங்கி களில் மாதத்துக்கு நா ன்குமுறை மட்டுமே நேரடியாக வங்கிக்குச் சென்று பரிவர்த்தனை செய்ய முடியும். அதற்கு மேல் சென் றால், 90 ரூபாய் சேவைக்கட்டணம் என்ற அளவிலும், 1,000 ரூபாய்க்கு 5 ரூபாய் என்ற அளவிலும் கட்டணம் வசூலிக்கின்றன.)
எல்லாவற்றுக்கும் மேலாக, நேர த்தைச் செலவழித்துதான் வங்கிக் குச் சென்றுவர வேண்டும். பொது த்துறை வங்கிகளில் இன்றும் இன்டர்நெட் தொழில்நுட்பம் பல சமயங்களில் செயலிழப்பதால், அது சரியாகும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அல்லது மீண்டுமொருநாள் வங்கிக்குச் செல்லவேண்டிய கட்டாய ம் ஏற்படுகிறது. இதுமாதிரியான அலைக்கழிப்புகளுக்கு வங்கிகள் என்ன இழப்பீட்டை வாடிக்கையா ளர்களுக்கு தரப்போகிறது என்று கேட்கிறார்கள் மக்கள்.
தற்போது வந்திருக்கும் புதிய விதி முறைகள்படி வங்கிகளுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றாலும், புதிய கட் டணங்களினால் ஏடிஎம் பயன்பாடு குறைந் து வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு நேர டியாக வரும் பட்சத்தில் அங்கு ஊழியர்களி ன் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தால் மட்டுமே பணப்பட்டுவாடா எளிதில் நடக்கு ம். ஊழியர்கள் எண்ணிக்கையை உடனடி யாகப் பெருக்குவது வங்கிகளுக்கு அதிக செலவு பிடிக்கும் அம்சமாகவே இருக்கும். தவிர, அதை உடனடியாகச் செய்வதும் சாத் தியமற்றது.
தவிர, ஏற்கெனவே பல ஆயிரம் கோடி ரூபா ய் செலவு செய்துதான் பல இடங்களில் ஏடி எம் இயந்திரங்களை அமைத்திருக்கின்றன வங்கிகள். இனி இந்த இயந்திரங்களின் பயன்பாடு மிகப்பெரிய அ ளவில் குறையும் என்கிறபோது, இதனை மீண்டும் ஒழித்துக்கட்ட வேண்டிய கட்டாய ம் வங்கிகளுக்கு ஏற்படும். ஆக, தொழில் நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் மீண்டும் கற்காலத்தை நோக்கி செல்வதற்கான நடவடி க்கைகளையே ஆர்பிஐயின் இந்தப் புதிய விதி முறைகள் வழிவகுக்கிற மாதிரி இருக்கிறது என் பதே வங்கி வாடிக்கையாளர்களின் எண்ணமா க இருக்கிறது.
இந்த விஷயத்தில் முட்டைக்கு ஆசைப்பட்டு வாத்தினைக் கொன்ற கதையாக ஆகிவிடக் கூடாது என்பதே நம் வேண்டுகோள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...