Saturday, October 25, 2014

சு.சுவாமியின் மனைவியை நீதிபதி ஆக்க மறுத்ததற்கு ஆர்வி க்கு கிடைத்த தண்டனை ….!!!


“ஆர்வி” என்கிற ஆர்.வெங்கட்ராமன் தமிழக மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். முதலில் காமராஜர் அமைச்சரவையில் தமிழ்நாட்டில் தொழிலமைச்சராக அவர் ஆற்றிய பணிகள்
அற்புதமானவை. தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகள், ஐடிஐ, பாலிடெக்னிக் பயிற்சிப் பள்ளிகள் ஆகியவை துவங்க முழுமுதல் காரணம் அவர் தான்
பின்னர் மத்தியில், பாதுகாப்பு அமைச்சராகவும், அதன் பின் துணை ஜனாதிபதியாகவும், பிறகு July 1987 முதல் July 1992 வரை இந்தியாவின் ஜனாதிபதியாகவும் பணியாற்றினார். மிகச்சிறந்த நேர்மையாளர்.
அவர் ஜனாதிபதியாக இருந்த கால கட்டத்தில் பல அரசியல் சட்ட சிக்கல்கள் எழுந்தன. அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த 5 வருட காலத்திற்குள் -வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்மராவ் என்று 3 பிரதமர்கள் மாறி மாறி பதவிக்கு வந்தனர். எந்தவித பாரபட்சமுமின்றி மிக நேர்த்தியாக நிலைமையை சமாளித்தவர் ஆர்வி அவர்கள்.
rvenkataraman
??????????????????????
அப்பேற்பட்ட மனிதரையும் விடவில்லை -
சாமி என்னும் பூதம்…..!!!
ஆர்வி அவர்கள் 1995-ல் “My Presidential Years” என்கிற
தலைப்பில் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவர்
சந்திக்க வேண்டியிருந்த சில வித்தியாசமான சம்பவங்களைப்
பற்றி புத்தகம் ஒன்றை எழுதினார்.

சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் மத்திய சட்ட அமைச்சராக இருந்தவர் திருவாளர் சுப்ரமணியன் சுவாமி. வக்கீலாகத் தொழில்புரிந்து வந்த தன் மனைவியை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய
முயற்சி செய்திருக்கிறார். இது குறித்து ஆர்வி அவர்களின் புத்தகத்திலிருந்து அவரே கூறியிருப்பது -
———————
“திருமதி ரோக்சனா சுப்ரமணியன் சுவாமி அவர்களை
டெல்லி உயர்நீதி மன்றத்தில், ஒரு அடிஷனல் ஜட்ஜாக
நியமிப்பது குறித்த ஒரு கோப்பு என்னிடம் ஒப்புதலுக்காக வந்தது. அந்த கோப்பில், என்னிடம் வருவதற்கு முன்னர் – சட்டப்படி யார் யாரிடம் எல்லாம் கையெழுத்து வாங்கப்பட வேண்டுமோ, அவை எல்லாம் வாங்கப்பட்டிருந்தன.
திருமதி சுவாமி, பத்து வருடங்கள் நாலு மாதங்களுக்கு
வக்கீலாகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருந்தார்.
(சட்டப்படியான குறைந்த பட்ச தேவை – 10 வருட அனுபவம்…. ) அவரது வருட வருமான சுமார் 20,000/- என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தில், அவரை விட அதிகமான அனுபவமும், அவரை விட அதிகமான வருமானமும்
பெறும் இன்னும் பல பெண் வழக்கறிஞர்கள் பணியாற்றி வந்தனர். தகுதியுடைய பல சீனியர்களை தவிர்த்து விட்டு, திருமதி சுவாமியை நீதிபதி பதவிக்கு நியமனம் செய்வது பார் கவுன்சில் நடைமுறைகளுக்கு ஏற்ப அமையாது.
எனவே, நான் கோப்புகளை, மறு ஆலோசனை செய்வதற்காக, பிரதமருக்கே திருப்பி அனுப்பி விட்டேன்.
இதன் விளைவாக, டாக்டர் சுப்ரமணியன் சுவாமி,
பாராளுமன்றத்தின் ‘செண்ட்ரல் ஹாலில்’ எனக்கு எதிராக மிக பலமான தாக்குதல் ஒன்றை மேற்கொண்டார்.
என் மனசாட்சிக்கு விரோதமாக நான் நடந்து கொள்ளவில்லை என்பதால் - நான் இவற்றைப் பொருட்படுத்தவில்லை.”
——————–
தகுதியற்ற ஒருவர் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக
நியமனம் செய்யப்பட ஒப்புதல் அளிக்காததற்காக “ஆர்வி” அவர்களுக்கு கிடைத்த வெகுமதி என்ன …?
சு.சுவாமியால் விஷ வார்த்தைகள் உமிழப்பட்டன -
என்னவென்று ….?
1) பாகிஸ்தான் ஒற்றராக மாறிய, இந்திய கப்பற்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு, ஆர்வி, ராஷ்டிரபதி பவனில் அடைக்கலம் கொடுத்தார்…..
2) ஆர்வி அவர்களின் மகள், ராஷ்டிரபதி பவன் என்கிற
விலாசத்தைப் பயன்படுத்தி, தான் நிர்வகித்து வந்த ஒரு
தனியார் ட்ரஸ்டுக்கு 18 கோடி ரூபாய் அளவிற்கு
பணம் வசூலித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...