Saturday, October 11, 2014

பல மடங்கு மருந்து விலை உயர்வை அனுமதித்த பாஜக அரசு , தடுத்து நிறுத்துமா உச்ச நீதிமன்றம் ??

The BJP government decision to decontrol prices of 108 drugs -- used to treat tuberculosis, AIDS, diabetes and heart ailments -- has jacked up their prices. In some cases, prices have seen an unbelievable rise.

The price of Glivec, an anti-cancer tablet, for example, has risen from Rs 8,500 to Rs 1.08 lakh.

Plavix, used to treat blood pressure and heart ailments, will cost Rs 1,615, against the earlier Rs 147. An anti-rabi injection, Kamrab, priced at Rs 2,670, will now cost Rs 7,000.

The government has issued a circular to National Pharmaceutical Pricing Authority (NPPA), to withdraw its May 2014 guidelines on drug price control.

தேசிய மருந்து விலைநிர்ணய ஆணையம் என்று ஓர் அமைப்பு இருக்கிறது. மருந்துகளின் விலைகளை தனியார் நிறுவனங்கள் இஷ்டப்படி உயர்த்தாமல் கட்டுப்படுத்தும் நிறுவனம் இது.
2013 மே மாதத்தில் இந்த நிறுவனம் சில மருந்துகளுக்கு உச்சவிலை நிர்ணயித்து சுற்ற்றிக்கை விடுத்தது. மருந்து நிறுவனங்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தன.
புதிய பாஜக அரசு அமைந்த பிறகு 2014 செப்டம்பர் 23ஆம் தேதி, முந்தைய சுற்றறிக்கையை ரத்து செய்கிறது ஆணையம்.
அதாவது, சுற்றறிக்கையில் குறிப்பிட்டப்பட்ட 108 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் அல்லவாம். அதனால் உச்சவிலை நிர்ணயிக்கத் தேவையில்லையாம்.
அந்த மருந்துகள் எதற்குத் தெரியுமா? காசநோய், புற்றுநோய், இதயநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கானவை.
இந்தியாவில் இன்று மிகப்பரவலாக இருப்பது சர்க்கரை நோய் – நோயாளிகள் எண்ணிக்கை 4 கோடி. காசநோயாளிகள் எண்ணிக்கை 22 லட்சம். புற்றுநோய்க்கு ஆளானவர்கள் 11 லட்சம்.
சரி, இந்த சுற்ற்றிக்கை ரத்து செய்யப்பட்டதால் என்ன ஆகிவிடும்? உதாரணத்துக்கு -
புற்றுநோய்க்கான மருந்து கிளிவெக் விலை 8500 ரூபாயாக இருந்தது ஒரு லட்சத்து எட்டாயிரம் ஆகும்.
இரத்த அழுத்த்த்துக்கான மருந்து பிளாவிக்ஸ் விலை 147 ரூபாய் இருந்தது 1615 ஆகும்.
இதன் மூலம் Sanofi, Abbott, Zydus Cadila, Ranbaxy, Lupin, Sun, cipla ஆகிய மருந்து நிறுவனங்கள் லாபம் பெறும்.
மருந்து நிறுவனங்களின் வேண்டுகோள் காரணமாக, இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம், இந்த விஷயத்தை சொலிசிடர் ஜெனரலிடம் அனுப்பியதாம். ஆணையம் தன் வரம்பை மீறி விட்டது என்று அவர் தெரிவித்தாராம். எனவே, அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த சுற்ற்றிக்கை ரத்து செய்யப்பட்டதாம்.
இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சராக இருப்பவர் பெங்களூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஆனந்த் குமார். ஆர்எஸ்எஸ் வளர்ப்பு. ஏற்கெனவே நிறைய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். முந்தைய பாஜக ஆட்சியின்போது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது 14500 கோடி ஊழல் குற்றச்சாட்டு இவர்மீது உண்டு. கர்நாடகத்தில் உள்ள இந்து  அமைப்பான ராம் சேனாவே இவர்மீது 14000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. நீரா ராடியாவுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. மேலும் குற்றச்சாட்டுகளை இணையத்தில் நீங்களே தேடி அறியலாம்.
மருந்துவிலை நிர்ணய ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக இப்போது உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் அந்த வழக்கை கையில் எடுத்துக்கொண்டுள்ளது.
நமக்கு இருக்கும் நம்பிக்கை எல்லாமே நீதிமன்றத்தின் மீதுதான்.
ஆ...ர...ம்...ப....ம்.
(காங்கிரஸ் ஊழல், திமுக ஊழல் மட்டுமே கண்டுக்கணும். இதெல்லாம் கண்டுக்காம போகணும் மக்கா... அப்பதான் இந்தியா வல்லரசாகும்)
-
பி.கு. - ஆணையத்தின் முடிவுக்கு எதிராத்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது, அதன் பின்னணியில் ஊழல் உள்ளதா என்பது அதில் வராது.
 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...