Friday, October 31, 2014

முதல்வர் அவர்களே – டாக்டர் சு.சு.வுக்கு எழுதுங்கள் ….. மோடிஜிக்கு எழுதிப் பயனில்லை….

கருணையின் மொத்த உருவம் – பகவான் புத்தரின் வழிவந்த, ராஜபக்சே அவர்களின் நல்லாட்சி நடைபெறும் இலங்கையில் -
நேற்று தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தமிழகத்தைச்
சேர்ந்த 5 மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற, மாண்புமிகு
தமிழக முதல்வர் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி
அவர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாக செய்திகள்
வெளியாகி இருக்கின்றன….
மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது
தமிழக அரசுக்கு இருக்கும் அக்கறையும், அனுதாபமும்
தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.
இருந்தாலும், அரசியல் சட்டப்படி,
தமிழகத்திற்கு இலங்கையை நேரடியாக
கையாளக்கூடிய அதிகாரம் இல்லையே.
தமிழகத்திற்கு இது விஷயத்தில், செயல்பட
அதிகாரம் இல்லை என்பதால்,
தமிழக முதல்வரிடமிருந்து பிரதமர் அவர்களுக்கு,
உதவி கோரி இதுவரை எத்தனையோ கடிதங்கள்
போயிருக்கின்றன. ஆனால் பதில் என்று எதாவது
இதுவரை வந்திருக்கிறதா …?
பாவம் பிரதமர் – அவர் எதையென்று கவனிப்பார் …?
மாறி மாறி வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் -
மாநிலங்களில் தேர்தல்கள் -
ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர்,
ஜார்கண்ட் என்று ….
ஒரு நாளைக்கு ஐந்து முறை உடை வேறு மாற்ற வேண்டும்….
இடையிடையே, துடைப்ப ஷோக்கள், ‘ஒற்றுமை ரன்’கள் வேறு.
அடுத்து ஆஸ்திரேலியா வேறு போய் அவர்கள்
பாராளுமன்றத்தில் இந்தியில் உரையாற்றியாக வேண்டும்.
எனவே பிரதமர் மோடிஜி அவர்களுக்கு இது குறித்து கவனிக்க நேரமில்லையோ என்னவோ…. இருந்தால் செய்திருக்க மாட்டாரா என்ன …? ஏற்கெனவே 200 மஹாராஷ்டிரா மீனவர்களையும், 60 படகுகளையும் பாகிஸ்தானிடமிருந்து மீட்டுத் தந்தவருக்கு இது ஒரு பெரிய காரியமா என்ன ….?
பிரதமரால், எல்லாவற்றையும் கவனிக்க இயலாது என்பதால் தான் தமிழ் நாட்டுக்கு என்றே, தமிழர் நலனில் மிகுந்த அக்கறை காட்டும் பாஜக மூத்த தலைவரான டாக்டர் சு.சு. அவர்களை நேர்ந்து விட்டிருக்கிறார்….
எனவே, தமிழகத்திற்கு, குறிப்பாக இலங்கையிலிருந்து
உடனடியாக எதாவது நடக்க வேண்டுமென்றால் -
திருவாளர் டாக்டர் சு.சு. அவர்களுக்கு கடிதம் எழுதும்படி
கேட்டுக் கொள்கிறேன். அவர் ராஜபக்சே அவர்களுக்கு
ஒரு ‘போன்’ போட்டாலே போதும். அடுத்த கணம் மீனவர்கள் விடுதலைபெற்று விடுவார்கள்.
இவருக்குப் போய் கடிதமா … என்றெல்லாம்
தயவுசெய்து யோசிக்க வேண்டாம் ..
வேறு வழி இல்லை ….
என்ன செய்வது… பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்,
புளிய மரத்தில் தானே குடித்தனம் செய்ய வேண்டும்….?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...