Friday, October 10, 2014

செல்பேசிக்கு வரும் வேண்டாத அழைப்புகளை நிறுத்துவது எப்படி?

நீங்கள் தொலைத்தொடர்பு (BSNL / AIRTEL / AIRCEL and Etc) வாடிக்கையாளராஉங்கள் செல்பேசிக்குவரும் வேண்டாத குறுஞ்செய்திகளையும்,அழைப்புகளையும் நிறுத்த வேண்டுமா?அப்படியெனில் இது உங்களுக்கான தகவல்தான்.
எந்த வேண்டாத அழைப்புகளையும் அல்லதுகுறுஞ்செய்திகளையும் செல்பேசிக்கு வராமல்தடுப்பதற்கு அல்லது நிறுத்துவதற்கு 1909 என்றஇலவசத் தொடர்பு எண்ணிற்கு ஒருகுறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ செய்தால்போதும்.
வேண்டாத அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் என்பது என்ன?
நீங்கள் விரும்பாமலே உங்களுக்கு இடம் வாங்க விரும்புகிறீர்களா என்ற ரியல்எஸ்டேட் விளம்பரங்கள்லோன் வேண்டுமா என்ற தனியார் வங்கி விளம்பரங்கள்மற்றும் இன்ன பிற தொந்தரவுகள் தரும் அனைத்து துறை சார்ந்த அழைப்புகள்மற்றும் குறுஞ்செய்திகள்.நிறுத்துவதற்கான வழிமுறைகள்:
உங்களுக்கு வரும் விளம்பரத் தொடர்புகளை நிறுத்துவதற்கு இரண்டு வழிகள்உள்ளன.
1.முற்றிலுமாக நிறுத்துவதுஎந்த விளம்பரங்களையும் அழைப்புகளாகவோ,குறுஞ்செய்திகளாகவோ ஏற்க விருப்பமில்லை அல்லது நிறுத்த வேண்டும் என்றுநீங்கள் விரும்பினால் முற்றிலுமாக நிறுத்தும் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
2.பகுதி மட்டும் நிறுத்துவதுபகுதியாக நிறுத்துவதெனில் கீழ்க்கண்டவற்றில்எவை தேவைப்படுகிறதோ அவற்றின் எண்ணை மட்டுமோ அல்லது ஒன்றைமட்டுமோ அல்லது இரண்டுமூன்று பிரிவுகளையுமோ கூட தேர்ந்தெடுக்கவும்.
START 1 & 
வங்கி / காப்பீடு / நிதி தொடர்பானவை
START 2 & 
ரியல் எஸ்டேட் தொடர்பானவை
START 3 & 
கல்வி தொடர்பானவை
START 4 & 
உடல்நலம் தொடர்பானவை
START 5 & 
நுகர்பொருட்கள் / ஆட்டோமொபைல் தொடர்பானவை
START 6 & 
தொலைத்தொடர்பு / ஒளிபரப்பு / பொழுதுபோக்கு / .டிதொடர்பானவை
START 7 & 
சுற்றுலா தொடர்பானவை
எப்படி பதிவு செய்வது?
1909 என்ற எண்ணுக்கு அழைபேசியில் தெரிவிக்கவும் அல்லது குறுஞ்செய்திஅனுப்ப விரும்பினால் முழுமையாக நிறுத்துவதற்கு START 0 என்றும் ஒரு சிலவகைகளை மட்டும் நிறுத்துவதற்கு அந்த வரிசை எண்ணைத் தவிர மற்றவற்றைக்குறிப்பிட்டு உதாரணமாக START 2,3 (ரியல் எஸ்டேட்கல்விடைப் செய்து 1909என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
இப்படி பதிவு செய்ததும் உங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் தனிப்பட்ட எண் (Unique Number ) ஒன்று குறுஞ்செய்தியில் வரும்.
எத்தனை நாட்களில் நிறுத்தப்படும்?
தேசிய வாடிக்கையாளர் விருப்பப் பதிவேட்டில் (National Customer Preference Register)பதிந்த ஒரு வாரத்திற்குள் உங்களது வேண்டுகோள் ஏற்கப்பட்டு வேண்டாதவிளம்பர அழைப்புகள் நிறுத்தப்படும்.ஏற்கெனவே (National Do Not Call Registry) NDN இல் பதிவு செய்திருந்தால் மீண்டும்நீங்கள் குறுஞ்செய்தியோஅழைப்போ செய்தால் அது முழுமையாக நிறுத்தப்படும்பிரிவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும் (NDNC தான்தற்போது NCPR ஆக பெயர் மாற்றப்பட்டுள்ளது).
தொந்தரவுகள் தொடர்ந்தால்
NCPR இல் பதிந்து ஏழு நாட்களுக்குப் பிறகும் ஏதேனும் வேண்டாத விளம்பரஅழைப்புகள் வந்தால் அந்த எண்ணைக் குறிப்பிட்டு அதைப் புகாராகப் பதிவுசெய்யலாம்மூன்று நாட்களுக்குள் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும்வணிகநோக்கமில்லாத தகவல் ஏதேனும் வந்தால் அந்த நிறுவனத்தின் பெயர்,தொலைபேசி எண்அழைப்பு வந்த தேதிநேரம் (ரயில்வே நேரத்தைக் குறிப்பிடவேண்டும்மதியம் 4 மணி எனில் 16 என்று குறிப்பிடவேண்டும்மற்றும் பேசியவிஷயத்தின் நோக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் புகாரளிக்கவும்.புகாரளிப்பதற்கும் 1909 என்ற எண்ணையே இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம்.புகாரைப் பெற்றதற்கான எண்ணையும் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்இதுசம்பந்தமான புகார்கள் ஏழு நாட்களில் தீர்க்கப்பட்டுவிடும்.
மீண்டும் விருப்பத் தேர்வுகளை மாற்ற இயலுமா?
நீங்கள் முன்னர் தேர்ந்தெடுத்த பிரிவினை மாற்ற வேண்டுமெனில் அதாவதுஇரண்டாவது பிரிவான கல்வி சம்பந்தப்பட்ட விளம்பரங்களை வேண்டாம் எனப்பதிவு செய்திருந்து மீண்டும் வேண்டும் என விரும்பினால் அதற்கும் வழிஇருக்கிறதுமுன்னர் பதிவு செய்து மூன்று மாதங்கள் முடிந்த பின்னர் மீண்டும்உங்களது குறுஞ்செய்தியை உறுதி செய்வார்கள்அதை மீண்டும் உறுதிசெய்யலாம் அல்லது அதில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்தும் அனுப்பலாம்அதில்ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மீண்டும் புதிதாக பதிவு செய்ய அறிவுறுத்தப்படும்.
உங்கள் வேண்டுகோளை திரும்பப் பெற விரும்பினால் பதிவு செய்து மூன்றுமாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரு குறுஞ்செய்தி NCPR லிருந்து வரும்அதாவதுஉங்கள் வேண்டுகோள் 24 மணி நேரத்திற்குப் பின் திரும்பப் பெறப்பட்டுவிடும்என்று வரும்அதை உறுதி செய்யாமல் விட்டால் மீண்டும் வழங்குநர்வாடிக்கையாளர் விருப்பப் பதிவேட்டில் உங்கள் எண் சேர்க்கப்பட்டுவிடும் அல்லதுSTOP என்று டைப் செய்து ஓர் இடைவெளி விட்டு தேவைப்படுகிற வரிசைஎண்ணைக் கொடுத்தால் அதுகுறித்த அழைப்புகள் வரத் துவங்கும்.
கட்டணம்:
இந்த சேவையைப் பெறுவதற்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது.மற்ற சேவைகள் பாதிக்கப்படுமா?
உதாரணமாக ஏடிஎம்மிலிருந்து பணம் எடுத்ததும் தானியங்கி இயந்திரம் மூலம்செல்பேசிக்கு வரும் குறுஞ்செய்திகள் இதன் மூலம் தடுக்கப்படாதுஅதேபோலஆன்லைனில் பொருள் வாங்கும்போதோஏதேனும் தளத்தில் பதிந்து கடவுச்சொல்சரிபார்த்தலுக்கோபேருந்துரயில் முன்பதிவுக்கான குறுந்தகவலோ வருவதுஇதன் மூலம் பாதிக்கப்படாது.
//
குறுந்தகவலோ வருவது இதன் மூலம் பாதிக்கப்படாது.//

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...