Sunday, October 19, 2014

தீபாவளி (திருவிழா) நல்வாழ்த்துகள்!


தீபாவளித் திருநாள் என்கிற தீபஒளித்  திருநாள் வெகு அருகாமையில் வந்துவிட்டது. ஜஸ்ட் 45 மணி நேரங்கள்தான் நமக்கும் தீபாவளிக்கும் இடையில் இப்போது. ஜாதி, மத பேதமில்லாமல் நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த மகிழ்வான திருவிழாவைக் கொண்டாட கோலாகலமான (அ) பெப்ஸிகலமான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுக் காத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் மகிழ்வான, இதயம் நிறைந்த, இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

சின்ன வயதில் அதிகாலையில் எழுந்து புத்தாடை எப்போது தருவார்கள், பட்டாசு எப்படா வெடிக்கலாம் என்று ஆர்வமாய், வெறியாய் காத்திருந்த தருணங்களும், இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே தீபாவளிக்கான கவுண்ட் டவுனை ஆரம்பித்து உற்சாகமாய்க் காத்திருந்ததும் நினைவில் நிழலாடுகின்றன. அந்த மாணவப் பருவ வாழ்க்கையும், தீபாவளிகளும் மறக்க முடியாதவை.


தீபாவளியைக் கொண்டாடி முடித்த கையோடு நாமெல்லாரும் சந்தித்து மதுரையில் மற்றொரு தீபாவளியைக் கொண்டாட இருக்கிறோம் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அதற்கும் தயாராகி விட்டிருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். 26ம் தேதியன்று நாம் சந்திக்கும் நாளில் நிகழவிருக்கும் நிகழ்வுகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் (பெரும்பாலும் இருக்காது) அதுவும் பின்னர் பகிரப்படும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...