Sunday, November 16, 2014

நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தைக் காப்பாற்ற முயன்று வரும் 6 வயது சுட்டிப் பையன்

கொன்னொர் ஜோன்சன் எனும் 6 வயதுச் சுட்டிச் சிறுவன் ஒருவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவைக் காப்பாற்ற மேற்கொண்டு வரும் முயற்சி சமீபத்தி ஊடகக் கவனம் பெற்று அனைவரையும் ஈர்த்துள்ளது.
3 வயது முதற்கொண்டே தான் ஒரு விண்வெளி வீரனாக வர வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்த இச்சிறுவன் அப்படி என்ன பெரிதாக சாதித்து இந்தப் புகழைப் பெற்றுள்ளான் என சிந்திக்கிறீர்களா? மேற்கொண்டு வாசியுங்கள்..

சமீபத்தில் அமெரிக்க காங்கிரஸ் பொருளாதார நெருக்கடியால் நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தின் சில முக்கிய வருங்காலத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டங்களை ரத்து செய்தது. இதை எப்படியோ கேள்விப்பட்ட இச்சிறுவன் இது வருங்காலத்தில் தான் ஒரு விஞ்ஞானியாக அல்லது விண்வெளி வீரனாக வரும் கனவையும் பாதிக்கக் கூடியது என்ற கோணத்தில் சிந்தித்ததால் பெற்றோரின் உதவியுடன் இவன் மேற்கொண்ட முயற்சி தான் ஊடகக் கவனம் பெற்றுள்ளது.

இது பற்றி இச்சிறுவனே இப்படிக் கூறியுள்ளான்.. 'எனது முழுத் திட்டமும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இது குறித்து புகார் அளிக்கவுள்ளதுடன் எனது வங்கிக் கணக்கில் உள்ள 10.41 டாலர் முழுவதையும் நாசாவுக்காக அர்ப்பணிக்கவுள்ளேன்' இவ்வாறு யோசித்த இச்சிறுவனின் ஆர்வத்தைப் பாராட்டிய பெற்றோர் இந்த முயற்சிக்கும் மேலும் வலுச் சேர்க்கும் வண்ணம் இவ்வாறு அவனுக்கு வழிகாட்டியுள்ளனர். அதாவது அமெரிக்க அரச நிர்வாகம் மையம் கொண்டு இயங்கும் வெள்ளை மாளிகைக்கு தனது வேண்டுகோளை அங்கீகரிக்குமாறு சுமார் 100 000 கையெழுத்துக்களுடன் கூடிய மனுவை (Petition) கையளிப்பது என்று இச்சிறுவனுக்கு அவர்கள் ஆலோசனை அளித்தனர்.

இச்செயற்திட்டத்தை சொந்தமாக முழுமையாக வடிவமைத்த ஜோன்சன் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து இதுவரை 13 131 கையெழுத்துக்களை இணையத்தளமூடாக சேகரித்துள்ளான். மேலும் தன்னால் ஒரு இலட்சம் கையெழுத்துக்களை டிசம்பர் 29 இற்குள் சேகரித்து அமெரிக்க அரசை இணங்க வைக்க முடியும் என நம்பிக்கையுடன் சொல்கிறான் இச்சிறுவன். சிறு துளி பெரு வெள்ளம் என்ற பழமொழிக்கு முன்னுதாரணமாக செயற்படும் இச்சிறுவனுக்கு உங்களாலும் உதவ முடியுமெனில் பின்வரும் இணையத்தளத்தை அழுத்திப் பாருங்கள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...