Sunday, November 9, 2014

விரல்களை மடக்கு நோய்களை விரட்டு


நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உட லும் இந்தப் பஞ்ச பூதங்களால்
ஆனவையே. இந்த ஐந்து மூலங்களை யும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவத ற்கு இந்த ஐந்து மூலகங்களே காரண மாக உள்ளன. இந்த ஐந்துமூலங்களும் உடலில் சமன நிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பா க இருக்கும்.
நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூல கங்களைக் குறிப்பிடுகின் றன.
கட்டைவிரல்- நெருப்பையும் சுட்டுவிர ல்- காற்றையும் நடுவிரல்-ஆகாயத்தை யும் மோதிரவிரல்-நிலத்தையும் சுண்டு விரல் – நீரையும் குறிக்கின்றன.
தினமும் காலையில் 20 நிமிடங்கள் உங்களு க்குரிய முத்திரையைத் தேர்வுசெய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங் களோ வேறு சொற்களோ இதில் இல்லை.
சிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை!
தியானம்செய்பவர்கள் சுட்டுவிரல் கட் டை விரலைத்தொடும்படி வைத்துக் கொண்டு தியானம்செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண் மூடி அமர்ந்தால் மூளையின்சக்தி அதி கரிக்கும். ஞாபகசக்தி, ஒருமுகப்படுத் தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, டென்ஷன் முதலி யவை அகலும். மன அமைதி கிடைக்கும்.
மூட்டு வலி குணமாக வாயு முத்திரை!
மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கி ன்சன் நோய், வாயுத் தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், விரல்களை இப்படி வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவு ம். சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டுவிரலை அழுத்தும்படி வைத்துக்கொள்ளவும்.
காது நன்கு கேட்க, ஷன்ய முத்திரை!
காதில் வலி என்றால் இது போலக் கட்டை விரலால் நடுவிரலை மட க்கி அழுத்திக் கொண்டு உட்காரவு ம். நாற்பது நிமிடங்கள் இது போல் அமர்ந்தால் காதுவலி பறந்து போ கும். காது கேளாதவர்கள் இந்த ( shunya ) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.
சுறுசுறுப்பாக வாழ பிருத்திவி முத்திரை!
மனம் மிகவும் பதற்றமாக உள்ளதா? உடலும் உள் ளமும் சோர்ந்து போய்விட்டனவா? நோய் வாய்ப் பட்ட மனிதனுக்கு உடனடியாக திட வலிமையை அளிக்க வேண்டுமா? அனைத்திற்கும் பிருதிவி முத் திரை பயன்படும். மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின்மேல் வைத்துக்கொண்டு இருபது நிமிடங் கள் தியானநிலையில் அமருங்கள். அவ்வளவுதா ன். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக்கப்பட்டு விடும். மதிய உணவு க்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப் பிட்டால் அதன்பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.
இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை!
இரத்தம் சுத்தமாகவும் தோல்நோய்கள் குணமாகவு ம், தோல்மிருதுவாக மாறவும் சுண்டுவிரல் நுனி யையும் கட்டைவிரல் நுனியையும் இதுபோல வைத் துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உட லில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.
கொழுப்பு கரைய சூரிய முத்திரை!
உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்க வும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வை த்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.
கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை!
நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவு ம். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண் பார்வை பெற வாய்ப்பு அதி கரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனி கள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.
காய்ச்சல் குணமாக லிங் முத்திரை!
இரண்டுஉள்ளங்கைகளையும் விரல்களையும் இதுபோல் கோர்த்து இறுக்கிக்கொள்ளவும். இடக்கைப் பெரு விரல் நிமிர்ந்து நிற்கவேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெரு விரல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத் தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டா க்கும் சக்தியை லிங் முத்திரை கொடுத்து விடும். சளிக் காய்ச் சல், கொழுப்பு உள்ளவர்கள் இந்த முத்திரை யால் பெரிய அளவில் நன்மை அடையலாம். காய்ச்சலின் போது இந்த லிங் (ling) முத்தி ரையை அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் விரைந்து குணம்பெறலாம்.
நெஞ்சுவலியா? அபான் வாயு முத்திரை
நெஞ்சுவலி, இதயம் வேகவேகமாகத் துடித்தல் முதலியவற்றைஅபான் வாயு (apan vayu) முத்திரை குணப்படுத் தும். சுட்டுவிரல், கட்டை விரலின் அடியில் இரு க்க வேண்டும். அதன் பிறகு நடுவிரலும் மோதிர விரலும் கட்டைவிரல், நுனியைத் தொடுவது போல வைத்துக் கொண்டு தியானம் செய்யவும்.
மாரடைப்பு, பதற்றம் முதலியவற்றைத் தடுக்க….
வாயு முத்திரை, அபான் வாயு முத்திரை ஆகியவற்றுக்கு அடுத்து இப்படி விரல்களை வைத்துக் கொள்ளலாம்.
இரத்தக் கொதிப்பா? வியான முத்திரை
ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டு விரல், நடுவிரல் நுனிகளை வைத்துக் கொ ண்டு அமரவும். வியான( vyana) முத்திரை என்று இதற் குப் பெயர்.
எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற் கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதி க்குரிய முத்திரை யைச் செய்ய வேண்டும். இதனா ல் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச் சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்

    

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...