Monday, February 27, 2017

தனித்தனியாக பிரித்து கணக்கு பார்க்க வேண்டும் என்ற வாதத்தையும் ஏற்க மறுத்துவிட்டது.

₹ 2,01,83,956.53 சொத்து மதிப்பு 1.7.1991 வரை. இது அம்மாவின் சொத்து என்றும் முறையாக பெறப்பட்ட சொத்து என்றும் தீர்ப்பு சான்று வழங்கியுள்ளது.
₹ 9,91,05,094.75 நிகர வருமானம் 1.7.1991 முதல் முதல்வர் பதவியிலிருந்த 30.4.1996 வரை. (இதை ₹25 கோடி என்று மதிப்பிட்டு கர்நாடக உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது. உயர்நீதிமன்றம் வங்கிகளிடமிருந்து இந்த 32 கம்பெனிகள் பெற்ற கடன்களை குற்றம் சாட்டப்பட்ட தனிநபர்களின் வருமானம் என்று கணக்கில் கொண்டது தவறு என்ற வாதம் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால் இந்த கம்பெனிகள் A2, A3, A4 நிர்வகிக்கும் கம்பெனிகளாக இருந்தாலும் மற்றும் இவை யாவும் A1 போயஸ் தோட்ட விலாசத்தில் இயங்குவதாலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் கூட்டு சொத்து என்றே நீதிமன்றம் தீர்ப்பில் கருதுகிறது. தனித்தனியாக பிரித்து கணக்கு பார்க்க வேண்டும் என்ற வாதத்தையும் ஏற்க மறுத்துவிட்டது.
₹8,49,06,833.00 நிகர செலவினங்கள் 1.7.1991 முதல் 30.4.1996 வரை (இதில் ₹6 கோடி அளவுக்கான செலவு திருமண செலவாக தி.மு.க அரசு சமர்ப்பித்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மதிப்பீடு உம்மிடி நிறுவனத்தால்).
₹Rs.53,60,49,954.00 என்பது 30.4.1996 அளவில் இவர்களது 32 கம்பெனிகள் வாங்கிய சொத்தின் மதிப்பு அரசு மதிப்பீடு அடிப்படையில். (இதிலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவணங்களுடன் சமர்பித்த மதிப்பீடு ஏற்கப்படவில்லை. உதாரணமாக நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன சன்சிங்கர் இசை நிகழ்ச்சி நடத்தும் கங்கை அமரன் பேட்டியில் கூறியது - யார் வாங்குகிறார்கள் என்று கூட குறிப்பிடாமல் அடிமாட்டு விலைக்கு பதிவாளர்களை வீட்டிற்கே வரச்செய்து நிர்பந்தித்து வாங்கினார்கள் - என்பது. ஆனால் அந்த அடிமாட்டு விலையை ஏற்காமல் மார்பிள், கிரானைட் வைத்து இழைக்கப்பட்டுள்ளது என்பதால் அதிக மதிப்பு என்று அரசு மதிப்பீட்டாளர் சொன்னதுதான் சொத்தின் மதிப்பாக ஏற்கப்பட்டுள்ளது. கங்கை அமரனின் வாக்குமூலம் - பதிவாளரையே வீட்டிற்கு அனுப்பி வாங்குபவர் பெயரைக்கூட குறிப்பிடாமல் பதிந்து - என்ற வரை ஏற்கப்பட்டுள்ளது.
இதனால் வருமானத்திற்கு அதிகமான சொத்து என்பது தீர்ப்பு.
தீர்ப்பு முழுவதும் எல்லா பரிவர்தனைகளும் சசிகலா அவர்கள் கட்டுப்பாட்டிலும் வழிகாட்டுதலிலும்தான் நடைபெற்றுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது அனைத்தும் அவர்கள் கூட்டாக வசித்துவந்த போயஸ் தோட்ட விலாசத்தில் நடந்துள்ளது என்பதாலும், பல பரிவர்தனைகளில் A1 அவர்களின் வங்கி கணக்கிலிருந்தம் நடந்துள்ளன என்பதாலும், A1 ஒரு அரசாங்க பதவியில் உள்ளவர் என்பதாலும் இது அவர் பினாமிகளை வைத்து கூட்டாக செய்யும் சதி என்பது மறுக்கமுடியாத ஒன்றாக உள்ளது என்று தீர்ப்பு கூறுகிறது.
உள்ளபடி சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு மற்றும் அதையே வழிமொழிந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது எவ்வளவு நியாயமானதோ அதே அளவு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசுவாமி தீர்ப்பும் நியாயமானதுதான். கணக்கில் தவறு செய்துவிட்டார் குமாரசுவாமி என்பது என்று உச்சநீதிமன்றமும் ஏற்கவில்லை. குற்றம் பல நடந்திருப்பதால் நீதிபதி குமாரசுவாமி கணக்கில் கருத்தில் கொண்டவற்றை குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும் என்ற அடிப்படையில் வேறு கண்ணோட்டத்தில் மாற்றி பார்த்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
புரட்சித்தலைவி அம்மா இருந்தவரை தீர்ப்பு எழுத நீதிபதிகளுக்கு மனசாட்சி உறுத்தியிருக்க வேண்டும். அவர் இறந்த பின் அந்த நிரடல் இல்லாமல் தீரப்பில் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
ஏனோ இன்றுவரை உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பில் உள்ள தவறுகளை யாரும் சுட்டிக்காட்ட முனையவில்லை. ஏதாவது செய்யப்போய் சசிகலா + குடும்பத்தார் குற்றமற்றவர் என்று தீர்ப்பாகிவிடலாம் என்ற அச்சமும் காரணம். வைத்தால் குடுமி...சரைத்தால் மொட்டை என்றுதான் இதுவரை வந்த தீர்ப்புகள். உச்ச நீதிமன்றமே வீட்டிற்கே நிர்பந்த்த்தால் வந்த பதிவாளரை கண்டிக்கவில்லை என்று தீர்ப்பில் ஏராளமான ஓட்டைகள் உள்ளது என்பது மட்டும் உறுதி்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...