Monday, February 27, 2017

நெற்றிக்கண்திறப்பினும் குற்றம் குற்றமே.

 நான் மோடியின் தீவிர ஆதரவாளன் என்றாலும் சில கேள்விகள் என்னை உறுத்தி கொண்டிருக்கின்றன.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வருவதற்காகவே காவிரிமேலாண்மை வாரியத்தை உச்ச நீதிமன்றம் அமைக்க சொல்லியும் எதிர்ப்பு தெரிவித்தார்களா. கர்நாடகவே தண்ணீர் தருகிறேன் என்று சொன்னாலும் பாஜக அரசு எதிர்த்திருக்கும் என நினைக்கிறேன். காரணம் தண்ணீர் வந்து விட்டால் டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறும். விவசாயத்தை அழித்து அதனால் மக்கள் தங்கள் நிலத்தை ஹைட்ரோகார்பனுக்கு பிரச்சனை இல்லாமல் சுமூகமாக ஒத்துழைப்பர் என்று கணித்திருப்பர் என்றே நினைக்கிறேன்.
உயர்மதிப்புள்ள பணத்தை அழித்து அதைவிட உயர்மதிப்புள்ள பணத்தை அச்சிடுவதால் கருப்பு பணம் அதிகரிக்க தானே செய்யும். ஆக கருப்பு பணத்தை ஆதரிக்கிறாரோ என்ற சந்தேகமும் வலுக்கிறது. முன்கூட்டியே திட்டமிட்டு 50, 100 ரூபாய் நோட்டுக்களை மட்டும் அச்சடித்திருந்தால் கருப்பு பணத்தை பிடித்திருக்கலாம். உயிரிழப்புக்களையும் மக்களின் சிரமங்களையும் தவிர்த்திருக்கலாம்.
உயர்மதிப்பு பணத்தை செல்லாது என்று அறிவிக்கும் திட்டத்தை முன்கூட்டியே அம்பானிக்கு தாரை வார்த்திரூப்பாரோ என எண்ணத்தோன்றுகிறது. காரணம் ஜியோ சலுகைகள். அதன் மூலம் அம்பானியின் கருப்பு பணத்தை காலி செய்ய கெடுவோ சலுகையோ வழங்கபட்டிருக்கலாம் என தோன்றுகிறது.
மாட்டிறைச்சி தவிர்க்ப்படவேண்டிய ஒன்று.மாற்றுகருத்து இல்லை. மாட்டிறைச்சிக்கு எதிராக பேசும் பாஜக அதை ஏற்றுமதி செய்வதை தடுக்க என்ன செய்துள்ளது. மாறாக மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் 3 நிறுவனத்திடம் இருந்து கட்சிக்கு நிதி வந்துள்ளது என ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்திற்காக நம்மிடம் இருந்து வரிவசூலிக்கும் மத்தியஅரசு வெளிநாட்டு கழிவுகளை நம்நாட்டு கடலில் கொட்ட பணம் வாங்கி முயற்சித்து நீதிமன்றத்தில் குட்டு வாங்கியுள்ளது. கங்கை நதியை சுத்தம் செய்ய 2000 கோடி ஒதுக்கி அது என்ன ஆனதென்றே தெரியாமல் நீதிபதிகளின் கேள்விக்கு விடை தெரியாமல் பேந்த பேந்த முழித்துள்ளது.
இதுவெல்லாம் நடுநிலையாளனாக கேட்ட கேள்வி.
ஹிந்து மதஆதரவாளனாக ஒரு கேள்வி.
ராமர் கோவிலை இடித்து அங்கே கட்டப்பட்ட பாபர் மசூதியை இடித்ததை வரவேற்கிறேன். ஆனால் இதுவரையிலும் ராமர் கோவிலை மீண்டும் கட்டுவதற்கு ஒரு செங்கலை கூட இடவில்லை. ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் ராமர் கோவில் பற்றி வாக்குறுதி. ராமர் பேரை சொல்லி ஹிந்துக்களை ஏமாற்றுகிறாரோ என சந்தேகம். மேலும் 57 கரசேவகர்களை கலவரம் வருவதற்கு முன் காப்பாற்றியிருக்கலாம். ஒரு மாநில முதல்வருக்கு உளவுத்துறை அறிக்கை கொடுக்காமலா இருந்திருக்கும். இஸ்லாமியர்கள் கரசேவகர்களை கொன்ற பின் அதைக்காரணம் காட்டி வன்முறை நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம் என நினைக்கிறேன். அவர்கள் குளிர்காய்வதற்கு 57 இந்துக்கள் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பலி.
ஹிந்துமத ஆதரவாளனாக ஏற்றாலும் தமிழனாகவும் நடுநிலை வாதியாகவும் ஏற்க முடியவில்லை.
நெற்றிக்கண்திறப்பினும் குற்றம் குற்றமே.
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...