Monday, February 13, 2017

சசிகலாவுக்கு அந்நேரம் எதிர்மறை யான பாதகமான நேரமாகவே அமைந்துள்ளது.

சசிகலாவின் சொத்துகுவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் இன்று 14.02.2017 காலை 10.30 மணிக்கு உள்ள கிரகநிலைப்படி அவருக்கு எதிரான தீர்ப்பு வரும் என்றே நம்பலாம். மேஷ லக்னம், கடக அம்ச லக்னம், ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசியில் , சந்திர ஓரையில் தீர்ப்பு வெளியாக உள்ளது.லக்னாதிபன் செவ்வாய் சிறைவாசத்துக்குரிய 12 ல் மாரகாதிபன் சுக்ரனுடன் மறைகிறார்.5ம ஆம் திரிகோணாதிபதி சூரியன் கேதுவுடன் கிரகணபாதிப்பில் மாட்டுகிறார்.9ஆம் திரிகோணாதிபதி குரு ராகுவின் பார்வையில் சிக்குகிறார். லக்னமும் ராசியும் 6×8 ஆக சஷ்டாஷ்டகம் பெறுகிறது. எனவே சசிகலாவுக்கு அந்நேரம் எதிர்மறை யான பாதகமான நேரமாகவே அமைந்துள்ளது. இனி சசிகலாவின் ஜாதகத்திற்கு வருவோம். அவரின் ராசிப்படி தனுசுக்கு கோட்சார சந்திரன் கடும் எதிரியாகி(8 மாதியாகி ) பதவிஸ்தானத்தில் (10ல்) பதவியைக்கெடுக்க ஹஸ்தம் நட்சத்திரத்தில் சொந்தக்காலில் நிற்கிறார்.அந்த சந்திரனே ஓரையையும் வழிநடத்துகிறார். அவரே நடப்புநேரத்திற்கு அம்ச லக்னமும் (கடகம்) தருகிறார்.பதவி ஸ்தானம் 10 மிடத்தை 3,6,12 மாதிகளான சனி,சுக்ரன்,செவ்வாய் அசுபர்களாகவும் இருந்து பார்க்கிறார்கள்.ஆக அனைத்து கெட்ட கிரகங்களும் பதவியைக்குறி வைக்கின்றன.பாக்கியஸ்தான சூரியனும் 3ல் மறைந்து கேதுவுடன் கிரகணத்தில் சிக்குகிறார்.5 மாதிரி செவ்வாய் 6 க்குரியவன் சுக்ரனோடு சேர்ந்து 8மாதி சந்திரனின் பார்வையை பெறுகிறார். திசாபுக்தியை கெடுக்கும் சனி வழிநடத்துகிறார் . அவரே ஏழரைச்சனியும் நடத்துகிறார் ஜென்மத்தில் நின்று.எனவே குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அபராதங்கள் விதிக்கப்படலாம். ஆக இன்றோடு சசிகலா அவர்களின் பதவி ஆசை முடிவுக்கு வருகிறது.எனினும் நடப்புநேர லக்னத்தை 9 மாதிரி குரு பார்ப்பதால் சட்டநுணுக்க அடிப்படையில் குறைந்த காலத்திற்குள்ளாகவே வெளியில் வந்துவிடுவார் என்று நம்பலாம்.பார்ப்போம்.........

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...