Tuesday, February 14, 2017

நாம் அதை தாண்டிய தமிழ்ச் சமூகத்தின் இப்போதைய பிரச்சனைகளிலும் கவனம் செலுத்துவோம்....

தமிழக மக்களுக்கு :
அடுத்த முதல்வர் யார் ????? என்ற கம்பு சுத்துற அந்த ஒரே வேலையை அரசியல்வாதிகள் மட்டும் பார்க்கட்டும்...
நாம் அதை தாண்டிய தமிழ்ச் சமூகத்தின் இப்போதைய பிரச்சனைகளிலும் கவனம் செலுத்துவோம்....
ஏற்கனவே குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து கொண்டிருக்கிறது என்று நாம் கதறிக் கொண்டிரிக்கிறோம்......
ஆனால் இதை பற்று ஊடகங்கள் பேசவில்லை என்றாலும் கூட பரவாயில்லை.....
ஆனால் மேலும் அந்த வன்முறைகளுக்கு தீனிபோடுவது போல அறைகுறை ஆடை அணிந்து கொண்டு ஆட்டம் போடுவதெல்லாம் தேவையா??????
இப்போது விசய் தொலைக்காட்சியில் சோடி நம்பர்1 ஓடிக்கொண்டிருக்கிறது.....
பார்த்ததுமே நெஞ்சம் பதறுகிறது.... எவ்வளவு கீழ்த்தரமாக ஆடை அணியமுடியுமோ அவ்வளவு மோசமான உடைகளை அணிந்து கொண்டு ஆடுவது கோபக் கனலை அதிகப்படுத்துகிறது்..
வயிற்று பிழைப்புக்காக நிகழ்ச்சிகளில் நடனமாடும் பெண்களை அசிங்கமாக பேசி , அவர்களுக்கு இப்படி உடை அணிய கூடாது அது சரியில்லை இது சரியில்லை என்று கூறும் காவல்துறை பல நேரங்களில் அவர்களுக்கு அனுமதி கூட மறுக்கிறது...சில நூறு பேர் பார்க்கிற நிகழ்வுகளுக்கே இத்தனை கட்டுபாடுகள் என்றால்.....
இப்போது லட்ச கணக்கான மக்கள் பார்க்கும்
நிகழ்ச்சியில் இப்படி அரை குறை ஆடையோடு நடமாடுவதற்கு மட்டும் எப்படி அனுமதி அளிக்கிறது காவல்துறை?????
அப்படியெனில் ஒரு ஊடகம் உயர்தட்டு மக்கள் பணியாற்றும் இடத்தில் இப்படிப்பட்ட நடனங்கள் நடந்தால் அது கலாச்சார சீரழிவு கிடையாதா??????.
நடனத்திற்கு இது சாதாரணம் என்பவர்களெல்லாம் ஏன் பேசுவதில்லை ஆண்களுக்கு மட்டும் உடலின் அனைத்து பாகங்களையும் மூடிய ஆடை????
அம்மா தாய்மார்களே....ஏற்கனவே சமூகத்தில் வன்முறை தாங்க முடியவில்லை...இதில் இந்த கூத்தையெல்லாம் எங்களால் பார்க்கமுடியவில்லை..... எப்போது உங்கள் ஆடை அவிழ்ந்து விழுமோ என்று அச்சமாக இருக்கிறது எங்களுக்கு......
வெறும்4 சுவர்களுக்குள் நடக்க வேண்டிய காமத்தை நடனம் என்ற பெயரில் பொது இடத்தில் அரங்கேற்றம் செய்யாதீர்கள்......
உங்கள் ஆடையால் நீங்கள் பாதுகாப்பாக தான் இருக்கிறீர்கள் ஆனால் எங்கள் குழந்தைகளுக்கு தான் பாதுகாப்பு இல்லை.....
இந்த லட்சணத்தில் அயிட்டம் என்ற ஆபாச வார்த்தைகள் வேறு......
என்ன கருமமோ.....
இந்த அசிங்கம் பிடித்த நடனத்திற்கு சதா இறங்கி வந்து வாழ்த்துகள் வேறு...... இதை டி.ஆர் பார்த்து கொண்டிருப்பது அசிங்கத்திலும் அசிங்கம்.....
இதற்கு மசாலா என்ற பெயர் வேறு..... என்ன இழுத்து போர்த்தி கொண்டு ஆடுகிறீர்கள்???? கொஞ்சம் கிளு, கிளுப்பாக ஆடுங்கள் என்ற அசிங்கம் பிடித்த வசனங்கள் வேறு....
விட்டால் நிர்வாண நடனம் என்று கொண்டுவந்து அதையும் கலை சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.....
இவர்கள் நடனம் ஆடுகிறார்களா இல்லை காமசூத்ரா வகுப்பு எடுக்கிறார்களா??????
மசாலாவோ என்ன........... வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் தயவு செய்து சமூக சீரழிவை செய்யாதீர்கள்...
ஒரு சில நடனமாடுபவர்கள் தவறு செய்தார்கள் என்பதற்காக ரெக்கார்ட் டான்ஸ் என்ற ஒன்றையே தடை செய்தவர்கள் .....
ஒரு ஊடகம் மிக பிரபலமான ஊடகம் பல லட்சம் மக்கள் பார்க்க கூடிய ஊடகம் தவறு செய்யும் போது வாய் மூடி மவுனம் காப்பது ஏன்?????
தவறு யார் செய்தாலும் அது தவறுதான்
 விசய் தொலைக்காட்சியின் இந்த கூர்தக பார்த்த பின்பும் மக்களும், சமூக ஆர்வலர்களும், அரசும், பேசாமல் இருப்பது ஏன்????
பெரிய இடம் என்ற பயமா??????
ஆனால் மக்களாகிய நாங்கள் யாரை கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை....
#விசய் தொலைக்காட்சி- கு என்னுடைய நேரடியான கண்டனம் இது....
மக்களே இதையெல்லாம் பார்த்துவிட்டு நம்முடைய எதிர்ப்பை நாம் தெரிவிக்காவிட்டால் இன்னும் பல வன்முறைகளுக்கு நாமும் சாட்சிகளாவோம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...