Wednesday, February 22, 2017

குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக.?

1. சுமங்கலிப்பெண்களின் தலைவகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.
2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம்
ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின்
சக்தி குங்குமத்தில் உள்ளது.
3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது,
தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின்
பலத்தைப் பெருக்கும்.
4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை
தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும்
வசியம் செய்வது கடினம்.
5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட
பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக்
குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு
நிறத்தில் இருப்பது நல்லது.
7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை
உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும்
மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள்
உண்டாகும்.
8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும்
வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது
சிறப்பு.
Image may contain: one or more people and closeup
9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற்
போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை
அதிகரிக்கும்.
10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது
மிகுந்த துணிவைக் கொடுக்கும்.
11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம்
அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை
போன்றவற்றை ஊக்குவிக்கும்.
12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக்
கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும்.
குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல்
குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...