Saturday, February 25, 2017

மரத்து விட்டது மனசு ..........

வாக்கிய பஞ்சாங்கத்திற்கும்,திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வித்தியாசம் ஏற்படுவதுண்டு.அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வித்தியாசம் ஏற்படும்.அமாவாசை ,பெளர்ணமி தினங்களில் இந்த வித்தியாசம் மிகக்குறைவாக இருக்கும்.அஷ்டமை,நவமி,தினங்களில் இந்த வித்தியாசம் அதிகமாக இருக்கும்.தமிழகத்தை பொறுத்தவரை வாக்கிய பஞ்சாங்கமே அனுஷ்டிக்கப்படுகிறது.திருநெல்வேலி,ராமநாதபுரம்,மதுரை,ஸ்ரீரெங்கம்,சேலம்,கும்பகோணம் ஆற்காடு ஆகிய ஊர்களில் இருந்து வெளிவரும் பிரபல பஞ்சாங்கங்கள் வாக்கிய பஞ்சாங்கள்தான்.
சென்னை,காஞ்சிபுரம் ,ஈரோடு ,சேலம் ஆகிய ஊர்களில் இருந்து திருக்கணித பஞ்சாங்கள் வெளிவருகின்றன..
இதன் அடிப்படையில் வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யால் பழமையை அப்படியே பிரதிபலிக்கிறது.திருநள்ளாறு சனி பெயர்ச்சியும் இதன் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.ஆலங்குடி குரு பெயர்ச்சியும் வாக்கிய அடிப்படையில்தான் கணிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...