Wednesday, April 26, 2017

மிகவும் சீரியசான பதிவு இது...

சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்திற்கான புவியியல் ரீதியான ஆய்வுகளை மெட்ரோ கட்டுமான நிறுவனம் அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்து இருந்தது..
நாசா உதவியுடன் புவியில் ஏற்படும் புயல், மழை, சுனாமி ஆகியவற்றை சாட்டிலைட் மூலம் துல்லியமாக அறிந்து சொல்லும் அந்நிறுவனம்..
இந்த பள்ளத்திற்கான காரணம் பூமியின் அடிப்புறத்தில் உள்ள பாறைத் தட்டுகள் விலகியதால் ஏற்பட்டது என்பதும்;
இது.. திடீர் என நிகழ்ந்தது அல்ல 
ஒரிரு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பலத்த அதிர்வு அல்லது 
ஒரு சிறு பூகம்பத்தின் விளைவே எனவும் முதலில் கண்டு பிடித்தது.. இந்தியாவின் கிழக்கு திசையில் இந்த அதிர்வு ஏற்பட்டதாக 
அடுத்து கண்டு பிடித்தது...... இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்ட பூகம்பம்தான் சுனாமியாக மாறியது என்பதால் அதிர்ந்த அந்நிறுவனம்
மீண்டும் சுனாமி வருமோ என அச்சத்துடன் ஆராய்ந்த போது மேலும் திடுக்கிட்டது.....
அந்த அதிர்வு சென்னையிலேயே ஏற்பட்டது என்பதை கண்டு பிடித்தது......
அது எந்த இடம் என கூகுள் உதவியுடன் துல்லியமாக கண்டுபிடித்து அதிர்ச்சியில் உறைந்தது..! 
ஆம் அது மெரினா கடற்கரை.!
அன்று அங்கு பூமிக்கு கீழே
3 முறை பூகம்பம் அடுத்தடுத்த 
சில விநாடிகளில் நடந்திருப்பது
தெரிய வந்தது..
விஞ்ஞானிகள் பரபரப்பாக
விடை தேடியதில்........
அன்று தான் 'அம்மா சமாதி'யில் "சின்ன அம்மா" 3 முறை சத்தியம் செய்தார்கள் எனக் கண்டறிந்து....
அந்த நேரத்தை ஆராய்ந்தபோது
பூகம்ப மையத்தில் உள்ள
ரிக்டர் "அடி" ஸ்கோலில்
சின்ன அம்மா அறைந்த...
அதே நேரத்தில் 9.4 என்னும்
ரிக்டர் அளவில் 2 முறையும்,
10.5 என்னும் அளவில் கடைசி முறையும்,
அதிர்வு பதிவாகியிருந்தது.....!
அந்த அதிர்வால் விலகிய
பாறைத்திட்டுகள்தான்
மெல்ல மையம்கொண்டு
விலகி விலகி போயஸ் கார்டன் நோக்கி செல்லும் வழியில்
அண்ணா சாலையில்
பள்ளம் ஏற்படுத்தி
அமெரிக்க தூதகரம்வரை பாதிப்புக்குள்ளாக்கியது....... அங்கிருந்து லெஃப்ட் எடுத்தால் போயஸ் கார்டன் வரும்..
'சிங்கம் சூர்யா'கூட
ஒன்றரை டன் வெயிட்டில் தான் அறைவார்....
ஆனால் "சின்ன அம்மா"
10 ரிக்டர் வெயிட்டில் அறைவார் என
அவர் பவரை தெரிந்து கொண்ட நாசாவே அலறி அதிர்ந்து இருக்கிறது..
இது எப்படி இருக்கு.....
வெய்யில் அதிகமா இருக்கு.....
என்னத்த செய்ய.................. 😭😭

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...