Friday, April 28, 2017

சின்ன சின்ன மருத்துவ குறிப்பு............

1. பல் வழி நீங்க சிறிது ஆப்பசோடாவை எடுத்து ஈறின் மீது அழுத்தி தடவவும்
2. காலையிலும் மாலையிலும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஆப்பசோடாவை கலந்து வாய் கொப்பளித்தால்
பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்
3. தக்காளி சூப்புல் ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை போட்டு குடித்தால் புளித்த ஏப்பம் உடனே
சரியாகிவிடும்
4. வேர்க்குரு நீங்க ஒரு ஸ்பூன் ஆப்பசோடாவை சிறிது தண்ணீ கலந்து பூசினால் சரியாகிவிடும்
5. நல்லெண்ணெய் (அ) தேங்காயெண்ணெயில் ஏதாவது ஒரு எண்ணெயில் மிளகைப் போட்டு நன்கு
காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள் இந்தத் தைலத்தைத் தலைக்குத் தேய்த்துக்கொண்டு, குளித்து
வாருங்கள். வாரம் ஒரு முறை போதும். தலைக்கனம், நாட்பட்ட வலி, நோய்கள், பாண்டு இருமல்,
தலைவலி, நீர்க்கோவை ஆகிய பிணிகள் பறந்தோடி விடும்.
6.வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை
பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
நீர்கடுப்பா
நீர்கடுப்பு ஏற்பட்ட சமயம்1 கிளஸ் தண்ணீரை சூடு செய்து 2 தேக்கரண்டி சீரகத்தை எடுத்து அதில் போட்டு நன்கு கொதித்ததும் இறக்கி ஆறவைத்து குடித்தால் உடனே நீர்கடுப்பு கேட்க்கும்.
நம்மால் செய்யக்கூடிய சில கை வைத்தியம் !!!!
1.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
2.இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்
3.சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை
அளிக்கும்.
4.தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
5.அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.
6.அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மைவராது .
7.மருதாணிப் பூவின் வாசத்திற்கு பேனை விரட்டும் சக்தி உண்டு. துளசியுடன், மருதாணிப் பூவையும் அரைத்துத் தலையில் தடவி ஊறிக குளித்தால், பேன் மறைந்து
8.கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்
9.பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும்.
ஆரோக்கிய டிப்ஸ் !!!
1.வண்டு கடித்த இடத்தில் வெங்காயத்தை வெட்டி சூடு பறக்க தேய்த்தால் வலி போய்விடும்.
2.மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.ரத்தம் சுத்தமடையும்.
3.துளசி இலையை தேள் கொட்டிய இடத்தில் தேய்த்தால் விஷம் நீங்கி விடுமாம்.
4.மோரின் அவ்வப் போது முருங்கை இலை போட்டு குடித்து வந்தால் மஞ்சள் காமாலை நோய் வராது.
5.இரவு உறக்கம் வராமல் தவிப்பவர்கள்,ஒரு கப் சூடான பாலில் சிறிதளவு தேன் கலந்து பருக தூக்கம் வரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...