Sunday, April 9, 2017

நீ இல்லாமல் உன் தமிழ் நாடு சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது அம்மா....

உன்னை ஊழல் குற்றவாளி என்றார்கள்....
ஆம்இந்த மன்னார்குடி கொள்ளை கும்பலின் கூடவே நீ பல வருடம் தனியே வாழ்ந்தாயே தாயே.......உன்னை அவர்கள் பல வழக்குகளிலும் தொடர்பு படுத்தாமல் எப்படி போவார்கள்....?
உன்னை அகம்பாவம் பிடித்தவள்....தலைக்கனம் பிடித்த்தவள்...., எல்லோரையும் காலில் விழ வைக்கிறாய் என்றும் கூறினார்கள்..
ஆம் தாயே... இந்தக் கூன் பாண்டிகள் எப்படிப்பட்ட நயவஞ்சகம் மிக்கவர்கள் என்று இந்த 4 மாதத்தில் பார்த்துவிட்டோம்...சதிவேலைகள் பலவும் செய்யும் இந்த MLA, மந்திரிகள், MP க்களை நீ அடக்கி உன் காலடியிலேயே வைத்திருந்தது உண்மையிலேயே சரியான செயல் தான் தாயே....!!
வீணாக இலவசங்கள் கொடுத்து மக்களை சோம்பேறிகள் ஆக்கிவிட்டாய் என்று சொன்னார்கள்....
ஆம் எதிர்க் கட்சியில் இருக்கும் கருணாநிதியும், உன்னோடு இருந்த சதிகாரி சதிகலா வும் சாராய ஆலைகளை நடத்தி அரசு மதுக்கடைகளுக்கு மதுவை தடையில்லாமல் அனுப்பும் பொது மக்களைக் காக்க. நீ...தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் கல்வித் திட்டம், மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம், திருமணப் சீர்வரிசைத் திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்குதல், மேலும் அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா உப்பு திட்டங்கள், இன்னும் ஏழைப் பெண்களுக்கு ஆடு மாடுகள் வழங்குதல் என்று எத்தனை எத்தனை திட்டங்கள் தந்தாய்....?
நீ இல்லாமல் உன் தமிழ் நாடு சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது அம்மா....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...