Thursday, April 20, 2017

சசிகலாவையும் , தினகரனையும் ஒதுக்கி வைப்பதாக கூறுகிறார்களே தவிர நீக்குவதாக கூறவில்லை.

தினகரன் , சசிகலா அடிவருடி அமைச்சர்களெல்லாம் எப்படி ஒரே நாளில் ஞானோதயம் பெற்று, புத்தராக , புனிதராக மாறினார்கள் . இது ஆழமாக யோசிக்க வேண்டிய விடயமாகும்.
★ தினகரன் 128 கோடி ரூபாய் செலவு செய்தும் கூட RK.நகர் தொகுதியில் தேர்தல் நடக்காத சூழல் ஏற்பட்டு முதல்வர்கனவு தகர்ந்து போனது.
★ இதற்கான பணம் விநியோக பட்டியல் வருமான வரித்துறையிடம் மாட்டியதால் இனி தினகரன் தேர்தலில் நிற்க முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது.
★ இரட்டை இலையை கைப்பற்ற 50 கோடி விலைகொடுக்க , 10 கோடி முன்பணம் கொடுத்த தினகரன் , ஏஜெண்ட் மாட்டிக்கொண்ட பிறகு இனி அரசியல் வாழ்வு அஸ்த்தமிக்க போகிறது என்பதை உணர்ந்து கொண்ட தினகரனும் , அவரது ஏஜெண்டுகளும் திட்டமிட்டு ஆடிய நாடகந்தான் இந்த இணைப்பு முயற்சி.
★ இந்த நிலையில் அமைச்சர்கள் தங்களுக்குள் சந்திப்பு, பின் அமைச்சர்கள் முதல்வருடன் சந்திப்பு, பின் முதல்வருடன் தம்பிதுரை இரண்டுமுறை சந்திப்பு, பின் தினகரன் சசிகலாவை சந்திக்க செல்வதாக போக்கு காட்டி ரகசியமாக சட்ட வல்லுனர்களுடன் சந்திப்பு, அதன்பிறகு தினகரனுடன் செங்கோட்டையன் திண்டுக்கல் சீனிவாசன், டெல்லி பிரதிநிதி ஆகியோர் சந்திப்பு, அதன்பிறகு தினகரனை சந்தித்த இதே அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி மற்றும் இதர அமைச்சர்களுடன் கலந்தாலோசனை இதன்பிறகே ஜெயக்குமார் ஊடங்களை சந்தித்து தினகரனை ஒதுக்கி வைக்க முடிவெடுத்துள்ளோம் .பன்னீர் செல்வம் அணியுடன் பேச 9 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.எனும் அறிவிப்பு.
இவை அனைத்துமே தினகரன் எழுதிய கதை வசனம் நாடக நடிப்பு ஆகும்.
★ இரு அணிகளும் இணைய வேண்டுமென்று முதலில் பன்னீர்செல்வம் அவர்கள் சொல்லவில்லை.
ஊடக நிருபர்கள் கேட்கும் போது " அந்த அணியினர் பேச வந்தால் நாங்களும் பேசத்தயார் என கூறினார் பன்னீர்ச்செல்வம்.
இது குறித்து முதல்வர் பழனிச்சாமி எதுவுமே இதுவரை பேசவில்லை.
★ சசிகலா அணியில் உள்ள அமைச்சர்கள் நிர்வாகிகள் தினகரன் தலைமையை ஒதுக்கி வைத்துவிட்டோம் என கூறி வருகின்றனர் . சசிகலா வின் பொதுச்செயலாளர் பதவி குறித்தும் தினகரனின் துணைப் பொதுச்செயலாளர் பதவி குறித்தும் இதுவரை அமைச்சர்கள் எதுவுமே கூறாதது இணைப்பு நாடகத்தில் ஐயத்தை ஏற்படுத்துகிறது.
திரு ஒ.பி.ஸ் அவர்களுக்கு இன்று மக்களின் மத்தியில் ஆதரவு நிலை உருவெடுத்துள்ளது அனைவருக்கும் தெரிந்ததே அவரின் மக்கள் செல்வாக்கை பயன்படுத்தி , இரட்டை இலை சின்னத்தை சேதாரமின்றி கைப்பற்றுவதும், தற்போது உள்ள ஆட்சியை தொடர்வதுமே இவர்களின் திட்டம்.
சசிகலா குடும்பத்தை தள்ளி வைக்கப் பட்டதாக கூறபடுவதும் நாடகமே.அவராகவே ஒதுங்கி கொள்ள வேண்டும் என கூறும்
ஏஜெண்ட் தம்பிதுரை தன்னுடைய லட்டர் பேடில் கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒருவர்தான் தலைமை தாங்க வேண்டும். எனவே சின்னம்மா முலமைச்சராக வேண்டும் என்று கூறியவர் . சசிகலாவும், தினகரனும் தியாகம் செய்துள்ளனர் என கூறியவர்.
தொப்பி போட்டு கொண்டு பிரசாரம் மேற்கொண்ட இவர் எப்படி மனம் மாறினார் ?எல்லாம் புதிராகவே உள்ளது.
ஆர்.பி.உதயகுமார் ஜெயலலிதா சமாதியில் சசிகலா முதல்வராக வரவேண்டுமென தீர்மானமே போட்டார்.
அம்மா கொலை செய்யப்பட்ட தற்கு விசாரணை வைத்தால் முதல் குற்றவாளி .ஒ.பி.ஸ் தான் என்று கூறினார் சி.விஜய பாஸ்கர்.
இன்று மக்கள் மத்தியில் இவர்களுக்கென்று செல்வாக்கு இல்லை என்பதை Dr.ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலின் போதே தெரிந்து கொண்டார்கள் .அம்மாவை ஆதரித்த அத்தனை பெரு மக்களின் ஆதரவும் பன்னீர் செல்வம் அணிக்கே இருப்பதையும் புரிந்து கொண்டார்கள்.
ஆகையால் ஒ.பி.ஸ் அவர்களை வைத்து இழந்த செல்வாக்கையும் இரட்டை இலையையும் மீட்கவேண்டும் . அதற்காக தினகரன் குடுமாபம் ஒதுங்கியதைப் போல் நாடகமாட வேண்டும். கட்சியையும் ஆட்சியையும் சின்னத்தையும் கைப்பற்றிய பின் தினகரன் முதல்வராவது. இரட்டை இலையை கைபற்றிய பின் எச்சில் இலையாக அதன்பின் பன்னீர் செல்வம் அவர்களை முதுகில் குத்தி தூக்கி எறிவது .இதுதான் இவர்களுடைய நாடக குறிக்கோள். அதற்கு ஒ.பி.ஸ் அவர்களை பகடைக் காயாக, கறிவேப்பிலையாக பயன்படுத்த நினைக்கிறார்கள் தினகரனும் அவரது அடிவருடி அமைச்சர்களும்.
இதற்கு பன்னீர் செல்வம் அவர்கள் பலியாகி விடக்கூடாது.
சசிகலாவையும் , தினகரனையும் ஒதுக்கி வைப்பதாக கூறுகிறார்களே தவிர நீக்குவதாக கூறவில்லை.
கட்சியிலோ, ஆட்சியிலோ பதவிக்கு வர ஆசைப்படமாட்டேன் என அம்மாவிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்த சசிகலா , அம்மாவை கொன்று புதைத்த மூன்றாம் நாளே பொதுச்செயலாளராக புறவாசல் வழியை கையாளவில்லையா?
இவர்கள் சொன்ன படி எப்போதுமே நடந்ததில்லை.
" என்னை யாரும் கட்சியிலிருந்து நீக்கவில்லை. நான் கட்சியில் தான் இருக்கிறேன். எல்லா MLAக்களும் என்னோடுதான் இருக்கிறார்கள். மாலையில் MLAக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளேன் அதில் எனது பலம் தெரியும் " என காலையில் சொன்ன தினகரன் மாலையில் " நான் நேற்றே கட்சியிலிருந்து ஒதுங்கி விட்டேனே என முன்னுக்கு பின் முரணாக பேசும் வடிகட்டிய பொய்யன் தினகரன். அவர் பேச்சை ஓடுகிற நீரில்தான் எழுத வேண்டும்.
இவர்கள் உண்மையில் இரு அணிகளும் இணைவதில் உளப்பூர்வமான உணர்வோடு இருக்கிறார்கள் என்றால்...
1. சசிகலாவும், தினகரனும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.
2. ராஜினாமா செய்த கடிதத்தை மக்கள் பார்வைக்கு வெளிப்படுத்த வேண்டும்.
3. அம்மா வாழ்ந்த வீட்டில் எந்த உரிமையில் இன்னும் இந்த கும்பல் கூத்தடிக்கிறது?வீட்டை விட்டு உடனடி யாக வெளியேற வேண்டும்.
4. அம்மா வாழ்ந்த வீட்டை அரசுடமை ஆக்கியதாக பழனிச்சாமி அரசு , அரசாணை வெளியிட வேண்டும்.
5. இனி எந்த காலத்திலும் கட்சிக்கோ ஆட்சிக்கோ எந்த பதவிக்கும் ஆசைப்பட மாட்டோம் என உறுதிமொழி பத்திரம் எழுதி, அதில் இதுவரை அதிகார மையமாகத் திகழ்ந்த சசிகலா, தினகரன், மற்றும் மன்னார்குடி கும்பல் அனைவரும் கையொப்பமிட்டு அதை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
6. நமது எம்ஜிஆர். நாளிதழ், ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றை உடனடியாக கட்சி பெயருக்கு மாற்றித்தர வேண்டும்.
7. " மக்களால் நான். மக்களுக்காக நான் "என கூறிய அம்மாவின் சொத்துக்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கவேண்டும்.
8. அம்மா கொலையை CBI விசாரிக்க வேண்டு மென தமிழக அரசே கோரிக்கை வைக்க வேண்டும்.
இவை எல்லாம் நடந்தால் கட்சி ஒன்றுபட்டு செயல்படலாம். இது பதவியைக்காப்பாற்றிக் கொள்ள போட்ட நாடகமில்லை என மக்களும் நம்புவார்கள். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...