Thursday, April 20, 2017

Wonderful analysis ..............

" ஏற்றமும் , இறக்கமும் உள்ளது வாழ்க்கை என உணர்த்தியது "...
*பரமபதம்* எண்ணிக்கையில் கூட்டலையும் , பெருக்கலையும் விளையாட்டாய் கற்றுக் கொடுத்தது "...
*கிட்டிபுள்*
" வெட்டி வெளியில் எறிந்தாலும் , மீண்டு(ம்) தொடக்கத்திலிருந்து துவங்கி இலக்கையடைய சொல்லிக் கொடுத்தது "...
*தாயம்*
" அடுக்கியது சரித்து , மீண்டும் அடுக்கி அழித்தலும் , ஆக்கமும் நம்முள்ளுண்டு... என உணர்த்தியது "...
*ஏழுகல்*
" வேறு வழியில்லை என்ற நிலை வரும்வரை போராடு என பொட்டில் செதுக்கியது "...
*சதுரங்கம்*
" ஒளிந்தவர்களைக் கண்டுபிடிக்கும் பொறுமையும் , ஒளிந்து தனிமை நேரப் பெருமையையும் பெற்றுத் தந்தது "...
*கண்ணாமூச்சி*
" அடுத்தவர்க்கு சமமாக இல்லாது ஊனமாக இருந்தாலும் சாதிக்கனும் என நெறி ஊட்டியது "...
*நொண்டி*
" இருக்குமிடத்தில் எடுத்து , இல்லாவிடத்தில் நிரப்பும் குணம் , மனம் பதித்தது "...
*பல்லாங்குழி*
" நண்பன் உயரம் போக முதுகும் , தோளும் கொடுத்து குனிந்து , பணிந்து நிற்க சொல்லிக் கொடுத்தது " ...
*பச்சைகுதிரை*
அதனால் தானோ என்னவோ அந்த காலத்தில் தற்கொலைகள் அவ்வளவாக இருந்ததில்லை ...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...